ஆப்நகரம்

மதுரையில் பரபரப்பு; பல கோடி மதிப்பில் வைர, தங்க, வெள்ளி நகைகள் பறிமுதல்!

மதுரையில் பல கோடி மதிப்புள்ள தங்கம் வெள்ளி வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 19 Mar 2019, 12:59 pm
வரும் மக்களவை தேர்தலையொட்டி மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் தலைமையில் 10 பேர் கொண்ட பறக்கும் படையினர், மதுரையின் அனைத்துப் பகுதிகளிலும் வாகன தணிக்கை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை மேலூர் அருகே வாகன தணிக்கை சோதனையில் ஈடுபட்டபோது, கும்பகோணத்தில் இருந்து மதுரை விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் ஜீப் வாகனத்தை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.

சோதனை செய்தபோது வண்டியில் 12 கிலோ மதிப்பிலான தங்கமும், 52 கிலோ மதிப்பிலான வெள்ளி பொருட்களும், 4 கேரட் அளவில் வைர நகைகளும் இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட வாகனத்தையும் நகை பொருட்களையும் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரி ஆய்வு செய்தபின், வாகனத்தில் இருக்கக்கூடிய நகைகளை வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி