ஆப்நகரம்

சேலத்தில் 100 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை

சென்னையிலிருந்து சேலம் செல்லும் சாலையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 100 கிலோ தங்க நகைகைகளை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினர்.

Samayam Tamil 4 Apr 2019, 11:33 pm
சென்னையிலிருந்து சேலம் செல்லும் சாலையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 100 கிலோ தங்க நகைகைகளை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினர்.
Samayam Tamil சேலத்தில் 100 கிலோ தங்க நகைகள் பறிமுதல்
சேலத்தில் 100 கிலோ தங்க நகைகள் பறிமுதல்


கள்ளக்குறிச்சி அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாலையில் வந்த வாகனத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி அதற்குள் சோதனை நடத்தினர்.

வாகனத்திற்குள் மொத்தம் 27 பெட்டிகளில் தங்க நகைகள் இருந்தன. இது மொத்தம் 100 கிலோ எடை இருந்தது தெரியவந்தது. மேலும் நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் இருப்பதும் தெரியவந்தது.

அப்போது வாகனத்தில் வந்தவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், சேலத்தில் உள்ள நகைக் கடைக்கு நகைகள் எடுத்துச் சொல்லப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால் நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் நகைகளை கைப்பற்றினர். பிறகு சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் வருமான வரித்துறைக்கு அதிகாரிகள் தகவல் அளித்தனர்.

சம்பவம் இடத்திற்கு வந்த அவர்கள், நகைகளை பறிமுதல் மாவட்ட பாதுகாப்பு பெட்டகத்தில் பாதுகாப்பாக வைத்தனர்.

அடுத்த செய்தி