சென்னை: தமிழகத்தின் இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக வருகிற 27-ம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளில் பணப்பட்டுவாடா புகார் எழுந்ததால் அந்த தொகுதிகளில் நடைபெறவிருந்த வாக்குப்பதிவை, வருகிற 23-ம் தேதிக்கு தேர்தல் ஆணையம் ஒத்திவைத்தது.
அதன்பின்னர் ஜூன் மாதம் 13-ம் தேதியில் வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பிய நிலையில், திமுக தலைவர் கருணாநிதி, தேர்தல் ஆணையத்தின் இந்த செயலை வன்மையாக கண்டித்தார். மேலும், முதலில் அறிவிக்கப்பட்ட தேதியிலேயே தேர்தலை நடத்த வேண்டும் எனவும், இல்லையெனில் போராட்டத்தில் இறங்கப் போவதாகவும் அவர் அறிவித்தார்.
இதனிடையே, தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து, திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணையை நடத்திய சென்னை உயர் நீதிமன்றம், அந்த இரண்டு தொகுதிகளில் களம் காணும் வேட்பாளர்களிடம் கலந்தாலோசித்து இந்த விவகாரம் தொடர்பாக வருகிற 27-ம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என தீர்ப்பளித்தது.
தேர்தல் தேதியை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என வழக்கு விசாரணையின் போது தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளில் பணப்பட்டுவாடா புகார் எழுந்ததால் அந்த தொகுதிகளில் நடைபெறவிருந்த வாக்குப்பதிவை, வருகிற 23-ம் தேதிக்கு தேர்தல் ஆணையம் ஒத்திவைத்தது.
அதன்பின்னர் ஜூன் மாதம் 13-ம் தேதியில் வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பிய நிலையில், திமுக தலைவர் கருணாநிதி, தேர்தல் ஆணையத்தின் இந்த செயலை வன்மையாக கண்டித்தார். மேலும், முதலில் அறிவிக்கப்பட்ட தேதியிலேயே தேர்தலை நடத்த வேண்டும் எனவும், இல்லையெனில் போராட்டத்தில் இறங்கப் போவதாகவும் அவர் அறிவித்தார்.
இதனிடையே, தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து, திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணையை நடத்திய சென்னை உயர் நீதிமன்றம், அந்த இரண்டு தொகுதிகளில் களம் காணும் வேட்பாளர்களிடம் கலந்தாலோசித்து இந்த விவகாரம் தொடர்பாக வருகிற 27-ம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என தீர்ப்பளித்தது.
தேர்தல் தேதியை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என வழக்கு விசாரணையின் போது தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.