ஆப்நகரம்

ஆட்சியை கலைங்கப்பா; எல்லாரும் முதல்ல இருந்து ஜெயிச்சுக்கலாம்: சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ்...!

ஒற்றுமை இல்லாவிட்டால், ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்கலாம் என்று சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ் தெரிவித்துள்ளார்.

TNN 25 Aug 2017, 12:57 pm
சென்னை: ஒற்றுமை இல்லாவிட்டால், ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்கலாம் என்று சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil election should be the correct decision says kanagaraj mla
ஆட்சியை கலைங்கப்பா; எல்லாரும் முதல்ல இருந்து ஜெயிச்சுக்கலாம்: சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ்...!


ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் இணைந்ததை அடுத்து, டிடிவி அணி மட்டும் தனியே செயல்பட்டு வருகிறது. இதில் எடப்பாடி அணியில் இருந்த சூலூர் எம்.எல்.ஏ கனராஜ், தற்போதைய குழப்பத்தால் எந்த அணிக்கும் போக விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிளவுகள் நீடித்தால் ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்கலாம்; மக்கள் முடிவு செய்வார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

பதவி ஆசை காரணமாக மக்கள் மதிப்பை ஓபிஎஸ் இழந்துவிட்டார் என்றும், அதிமுகவில் தற்போது நடப்பது பதவிக்கான போட்டி என்றும் கூறினார்.

ஈபிஎஸ், ஓபிஎஸ், டிடிவி அணிகள் இணைந்து செயல்பட்டால் ஆட்சிக்கு நல்லது என்று கூறிய அவர், ஓபிஎஸ் அணியை இணைத்ததை தான் எதிர்ப்பதாகவும் தெரிவித்தார்.

பல்வேறு மாற்றங்களை அடுத்து, தற்போது மாவட்ட செயலாளர்கள் யார் என்றே தெரியவில்லை என்று சூலூர் எம்.எல்.ஏ கூறியுள்ளார்.

Election should be the correct decision says Kanagaraj MLA.

அடுத்த செய்தி