ஆப்நகரம்

தமிழகம் இருளில் மூழ்கும் அபாயம்; கிடைக்குமா நிலக்கரி - அமைச்சர் தங்கமணி பேட்டி!

தமிழகத்தில் மோசமான மின்வெட்டு பாதிப்பு இல்லை என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 18 Sep 2018, 1:23 pm
டெல்லி: தமிழகத்தில் மோசமான மின்வெட்டு பாதிப்பு இல்லை என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Thangamani


தமிழக மின் தேவைக்கான நிலக்கரி 3 நாட்களுக்கு மட்டுமே உள்ளது என்றும், இதற்காக போதிய நிலக்கரி வழங்க வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து டெல்லி சென்ற மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, மத்திய நிலக்கரி மற்றும் ரயில்வேத் துறை அமைச்சர் பியூஸ் கோயலை நேரில் சந்தித்தார்.

அப்போது தமிழகத்தின் மின் தேவையை பூர்த்தி செய்ய, 3 நாட்களுக்கு மட்டுமே போதிய நிலக்கரி இருப்பதாக கூறியுள்ளார். எனவே தேவையான நிலக்கரியை ரயில் மூலம் தமிழகத்திற்கு அனுப்பி வைக்குமாறும் வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, தமிழகத்தின் மின்வெட்டு இல்லை. போதிய மின்சாரம் இருக்கிறது.

காற்றாலை மூலம் பெறப்பட்டு வந்த 3000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கவில்லை. அதன் காரணமாக, சுழற்சி முறையில் அரை மணி நேரம் மட்டுமே மின்வெட்டு அமல்படுத்தப்படும். மத்திய அரசிடம் இருந்து பெறப்படும் நிலக்கரி மற்றும் காற்றாலை மின்சாரம் மூலம் 2000 மெகாவாட் வரை மின்சாரத் தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியும்.

ரயில்கள் மூலம் கொண்டு வரப்படும் நிலக்கரியின் அளவை, தினசரி 16 பங்கு வரை அளிக்க மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. இது 3 நாட்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும். வழக்கமான நிலக்கரி இருப்பு, 15 நாட்கள் வரை போதுமானது. நிலக்கரி மேலாண்மை விநியோகம் ஆனது, பருவமழை காரணமாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எதிர்க்கட்சிகள் வரும் மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு, பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றன.

கூடுதல் நிலக்கரியை வழங்க மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இதேபோல் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஓரிரு நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கிறது. எனவே மத்திய அரசு உரிய ஒத்துழைப்பை வழங்கும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

Electricity Minister P Thangamani Talks to reporters after meeting Union Minister for Railways Piyush Goyal.

அடுத்த செய்தி