ஆப்நகரம்

நுங்கு வெட்ட சென்ற விவசாயி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

தேனி அருகே நுங்கு வெட்ட சென்ற விவசாயி கரண்ட் கம்பத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 23 May 2019, 3:50 pm
தேனி அருகே நுங்கு வெட்ட சென்ற விவசாயி கரண்ட் கம்பத்தின் மீது விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil நுங்கு வெட்ட சென்ற விவசாயி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!
நுங்கு வெட்ட சென்ற விவசாயி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!


தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் குலாலர் பாளையத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (54). இவர் இன்று காலை சோலையூர் அருகே உள்ள முட்டைக்கோஸ் என்ற இடத்தில், நுங்கு வெட்டுவதற்காக இரும்பு ஏணியை வைத்து பனைமரம் மீது ஏறமுயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சார கம்பி மீது ஏணியுடன் விழுந்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே லட்சுமணன் உயிரிழந்தார்.

இதையடுத்து உடன் சென்ற அவரது மகனும், அருகில் இருந்த விவசாயிகளும் அவரை தூக்கி கொண்டு போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு லட்சுமணனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பனைமரம் ஏறமுயன்ற விவசாயி, மின்சார கம்பி மீது விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி