ஆப்நகரம்

சின்னதம்பி யானைக்கு இப்படியொரு பிரச்னையா? நம்பாதீங்க - வனத்துறை பரபரப்பு விளக்கம்!

ஆனைமலையில் சின்னதம்பி யானை எப்படி இருக்கிறது என்று வனத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 26 May 2019, 10:51 am
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வரகளியாறு யானைகள் முகாமில் உள்ள கூண்டில் சின்னதம்பி யானை அடைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வனத்துறை சார்பில் யானைக்கு வழங்கப்பட்ட உணவு புட் பாய்சன் ஆனது தகவல் வெளியானது.
Samayam Tamil Chinna Thambi1`


இதனால் வயிற்று போக்கால் ஏற்பட்டு, உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்டது. இதுகுறித்து தகவல் தெரிவிக்க வனத்துறை அதிகாரிகள் மறுத்து வருகின்றனர்.

மேலும் சின்னதம்பி யானையை பார்க்கவும் யாருக்கும் அனுமதி இல்லை என்று சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதன்படி, ஆனைமலை புலிகள் காப்பக (கள) இயக்குனர் கணேசன், துணை இயக்குனர் மாரியப்பன் ஆகியோரின் மேற்பார்வையில் சின்னத்தம்பி யானை பராமரிக்கப்பட்டு வருகிறது.

காப்பகத்தில் வனசரகர் தலைமையில் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு, யானைக்கு நல்ல உணவு அளிக்கப்பட்டு ஆரோக்கியமாக பயிற்சி எடுத்து வருகிறது. எனவே வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி