ஆப்நகரம்

மின்சாரம் தாக்கி மான் மற்றும் யானை பலி

கோவையில் மின்சாரம் தாக்கியதில், காட்டு யானை மற்றும் மான் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

TNN 11 May 2016, 9:06 pm
கோவையில் மின்சாரம் தாக்கியதில், காட்டு யானை மற்றும் மான் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil elephant deer electrocuted in tamil nadu
மின்சாரம் தாக்கி மான் மற்றும் யானை பலி


மேட்டுப்பாளையத்தில் உள்ள கல்லார் என்ற இடத்தில் தனியாருக்குச் சொந்தமான விவசாயப் பண்ணை உள்ளது. இங்கு, பாதுகாப்புக்காக, பண்ணை நிலத்தைச் சுற்றிலும் மின்சார வேலி போடப்பட்டுள்ளது. இந்நிலையில், காட்டில் இருந்து தண்ணீர் தேடி இவ்வழியே சென்ற 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்றும், 2 வயது கொண்ட மான் ஒன்றும் மின்சாரம் தாக்கி இறந்து கிடந்தன.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் அங்கு வந்த வனத்துறையினர், யானை மற்றும் மானின் உடலை பிரேத பரிசோதனை செய்து, அருகிலேயே புதைத்தனர். மேட்டுப்பாளையம் காட்டுக்குள் நீர்நிலைகள் வற்றிவிட்டதால், வன உயிரினங்கள் தண்ணீர் தேடி வெளியே வருவதாகவும், அப்போது, மின்கம்பியில் மோதியோ அல்லது வாகனங்கள் மோதியோ அவை உயிரிழப்பது தொடர்கதையாக உள்ளதாகவும் வனத்துறையினர் குறிப்பிட்டனர்.

அடுத்த செய்தி