ஆப்நகரம்

பழுதான வாகனத்தை தள்ளி விடும் யானை: வைரல் வீடியோ

பள்ளி மாணவர்களை ஏற்றிக் கொண்டு சென்ற காரை யானை ஒன்று தள்ளி விடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

Samayam Tamil 5 Nov 2019, 8:02 pm
நாகப்பட்டினம்: பழுதான பள்ளி மாணவர்களின் வாகனத்தை யானை ஒன்று தள்ளி விடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Samayam Tamil யானை
யானை


முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை கொண்டாடும் ஒரு விழா கந்த சஷ்டி. நடப்பாண்டுக்கான கந்த சஷ்டி திருவிழா கடந்த மாதம் 28ஆம் தேதி பூஜைகளுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் கடந்த 2ஆம் தேதி திருச்செந்த்தூரில் கோலாகலமாக நடைபெற்றது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய கோயிலில் இன்று சூரசம்ஹாரம்!

அதேபோல், மாநிலம் முழுவதும் முருகக் கடவுள் வீற்றிருக்கும் கோயில்களில் கந்த சஷ்டி திருவிழா கொண்டாடப்பட்டது. அந்த வகையில், நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் நடைபெற்ற கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு யானை ஒன்று வரவழைக்கப்பட்டது.


அப்போது கோயில் வழியாக சென்ற பள்ளி மாணவர்களை ஏற்றிக் கொண்டு சென்ற கார் பழுதாகி நின்றுள்ளது. இதையடுத்து, அந்த பகுதியில் நின்றிருந்த யானை, பள்ளி குழந்தைகள் சென்ற பழுதான வாகனத்தை தள்ளி விட்டது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி