ஆப்நகரம்

யானைகள் புத்துணர்வு முகாம் துவங்கியது

நீலகிரி மாவட்டம் முதுமலையில் யானைகள் புத்துணர்வு நல முகாம் துவங்கியது. அதேபோல், வண்டலூர், வால்பாறை உள்ளிட்ட இடங்களிலும் புத்துணர்வு நல முகாம் துவங்கியுள்ளது.

TNN 21 Mar 2017, 10:38 am
நீலகிரி: நீலகிரி மாவட்டம் முதுமலையில் யானைகள் புத்துணர்வு நல முகாம் துவங்கியது. அதேபோல், வண்டலூர், வால்பாறை உள்ளிட்ட இடங்களிலும் புத்துணர்வு நல முகாம் துவங்கியுள்ளது.
Samayam Tamil elephant refresh camp starts in mudumalai
யானைகள் புத்துணர்வு முகாம் துவங்கியது


தமிழகத்தில், கோவில்கள், மடங்கள் மற்றும் வனத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள யானைகளுக்கு, புத்துணர்வு அளிக்கப்படுவது வழக்கம். முகாமில், யானைகளின் உடல் மற்றும் மனம் சார்ந்த உளைச்சலைப் போக்கி, அவை ஓய்வெடுக்கவும் தெம்பு பெறவும் மருத்துவ கவனம் பெறவும் வழிவகை செய்யப்படும்.

அதன்படி, நீலகிரி மாவட்டம் முதுமலையில் யானைகள் புத்துணர்வு நல முகாம் துவங்கியது. அதேபோல், வண்டலூர், வால்பாறை உள்ளிட்ட இடங்களிலும் புத்துணர்வு நல முகாம் துவங்கியுள்ளது.

இன்று துவங்கியுள்ள இந்த முகாம் வருகிற ஏப்ரல் மாதம் 19-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Elephant refresh camp starts in Mudumalai

அடுத்த செய்தி