ஆப்நகரம்

நீலகிரியில் அரசுப் பேருந்தை மீண்டும் துரத்திய காட்டு யானை!

நீலகிரி மாவட்டம், மூப்பர்காடு அருகே பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தை காட்டு யானை துரத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Samayam Tamil 8 Jul 2018, 11:24 am
நீலகிரி மாவட்டம், மூப்பர்காடு அருகே பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தை காட்டு யானை துரத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Samayam Tamil cats
நீலகிரியில் அரசுப் பேருந்தை மீண்டும் துரத்திய காட்டு யானை!


நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து, பள்ளிக் குழந்தைகள் மற்றும் பயணிகளுடன் நேற்று மாலை புறப்பட்ட அரசு பேருந்து ஒன்று, மூப்பர்காடு நோக்கி வந்து கொண்டிருந்தது.

மூப்பர்காடு அருகே இரண்டாவது கொண்டை ஊசி வளைவில், சென்று கொண்டிருந்த போது பேருந்தை வழிமறித்த காட்டு யானை விடாமல் துரத்தியது. சுதாரித்துக்கொண்ட ஓட்டுனர் பேருந்தை பின்நோக்கி இயக்கி பயணிகளை காப்பாற்றினார். இருப்பினும், ஆவேசத்துடன் சுற்றிவந்த காட்டு யானை கழிவுகள் கொட்டும் தொட்டியை புதருக்குள் தூக்கி வீசியது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, குன்னூரில் இருந்து மூப்பர்காடு கிராமத்திற்கு செல்லும் பேருந்துகள், வனத்துறையினர் பாதுகாப்புடன் இயக்கப்படுகின்றன.

அடுத்த செய்தி