ஆப்நகரம்

உள்ளாட்சித் தேர்தல் நடத்த மற்றொரு சிக்கல்: தேர்தல் ஆணையர் சீதாராமன் பதவிக்காலம் முடிவு

தமிழகத்தின் மாநில தேர்தல் ஆணையர் சீதாராமனின் பதவிக்காலம் முடிந்துள்ளாதால், அவர் வகித்த பதவி காலியாகியுள்ளது உள்ளாட்சித் தேர்தல் நடத்த புதி சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

TNN 4 Apr 2017, 10:46 am
சென்னை: தமிழகத்தின் மாநில தேர்தல் ஆணையர் சீதாராமனின் பதவிக்காலம் முடிந்துள்ளாதால், அவர் வகித்த பதவி காலியாகியுள்ளது உள்ளாட்சித் தேர்தல் நடத்த புதி சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil end of tamilnadu election commissioner seetharamans tenture creates another hurdle for local body election
உள்ளாட்சித் தேர்தல் நடத்த மற்றொரு சிக்கல்: தேர்தல் ஆணையர் சீதாராமன் பதவிக்காலம் முடிவு


உள்ளாட்சித் தேர்தலை மே 14ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என்று தமிழக தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், மேலும் கால அவகாசம் கேட்டு தேர்தல் ஆணையம் சார்பில் மனுச்செய்யப்பட்டது.

தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம், ஏற்கெனவே போதிய அவகாசம் கொடுக்கப்பட்டுவிட்டதாகக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், தேர்தல் ஆணையத்திற்கு கூடுதல் நெருக்கடியாக தேர்தல் ஆணையர் சீதாராமனின் பதவிக்காலம் முடிந்துள்ளது. இதனால், தமிழக தேர்தல் ஆணையர் பதவி காலியாக உள்ளது. இதனால், உள்ளாட்சித் தேர்தலை உரிய நேர்த்தில் நடத்துவதில் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி