ஆப்நகரம்

கூட்டணிக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது: திருநாவுக்கரசர்

டெல்லியில் போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற அனைத்துக் கட்சிகளின் பொதுக்கூட்டத்தில் கூட்டணிக்கான நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக தமிழகக் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

TNN 23 Apr 2017, 12:53 pm
சென்னை: டெல்லியில் போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற அனைத்துக் கட்சிகளின் பொதுக்கூட்டத்தில் கூட்டணிக்கான நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக தமிழகக் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
Samayam Tamil engagement for political wedding says tn congress leader thirunavukkarasar
கூட்டணிக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது: திருநாவுக்கரசர்


டெல்லியில் கடந்த 41 நாட்களாக போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் திமுக தலைமையில் அனைத்துக் கட்சிகளின் பொதுக்கூட்டம் சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லையில் நேற்று இரவு நடந்தது.

இதில் காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட 23 கட்சிகள் கலந்து கொண்டன. இக்கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழகக் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூட்டசிக்கான நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகக் கூறினார்.

பெண் பார்க்கச் சென்று, நிச்சயதார்த்தம் முடிந்து, பின் திருமணம் நடக்கும். அதுபோல, அரசியல் கூட்டணிக்கான நிச்சயதார்த்தம் இந்தக் கூட்டத்தில் நடந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

அடுத்த செய்தி