ஆப்நகரம்

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் திடீர் விபத்து: பொறியாளர் கண்பார்வை பாதிப்பு!

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிகழ்ந்த விபத்தில் சிக்கிய பொறியாளர் பார்வை பாதித்த நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

TOI Contributor 4 Nov 2016, 3:53 pm
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிகழ்ந்த விபத்தில் சிக்கிய பொறியாளர் பார்வை பாதித்த நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Samayam Tamil engineer lost his vision in a sudden incident happened in tuticorin thermal power plant
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் திடீர் விபத்து: பொறியாளர் கண்பார்வை பாதிப்பு!


தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 யூனிட்டுகள் முலம் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 3வது யூனிட்டில் நேற்றிரவு கொதிகலனில் பழுது ஏற்பட்டு அதிலுள்ள ட்யூப் வெடித்தது. இதனால் அருகில் உள்ள கண்ணாடி கதவு வெடித்துச் சிதறியதில் பணியில் இருந்த சரவணராஜ் (29) என்பவருக்கு முகம் முழுவதும் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு கண் பார்வை பாதித்துள்ளதாக, மருத்துவர்கள் தெரிவிக்கவே, திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு மேல்கட்ட சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தூத்துக்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர். அனல் மின் நிலையத்தின் 5 யூனிட்டுகளில் உள்ள கொதிகலன்கள் பழையவையாக இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. சில வாரங்களுக்கு முன் 5வது யூனிட்டில் ஏற்பட்ட விபத்தில் 3 ஒப்பந்தத் தொழிலாளர்கள் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.

An Engineer lost his vision in a sudden incident happened in Tuticorin Thermal Power Plant.

அடுத்த செய்தி