ஆப்நகரம்

இளம் பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் தொந்தரவு : வாரிபர் கைது !

பொறியியல் பட்டதாரி பெண்ணிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் தொந்தரவு செய்த பொறியாளர் கைது செய்யப்பட்டார்.

Samayam Tamil 9 May 2018, 3:50 pm
பொறியியல் பட்டதாரி பெண்ணிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் தொந்தரவு செய்த பொறியாளர் கைது செய்யப்பட்டார்.
Samayam Tamil 44923


திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த நீலாந்தாங்கள் கிராமத்தில் வசிக்கும் சங்கர் என்பவரது மகன் பாலாஜி என்கிற தமிழ்ச்செல்வன். இவர் கடந்த 2011-15-ம் ஆண்டு விழுப்புரம் அருகே உள்ள மதகடிப்பட்டில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பொறியியல் படித்தார். அப்போது அதே கல்லூரியில் பொறியியல் படித்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகிவந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்தப் பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளார் பாலாஜி.

அப்போது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து அந்தப் பெண்ணிற்கு கொடுத்து உள்ளார் பாலாஜி. பின் அந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அப்பெண்ணை பாலியல் தொந்தரவு செய்த பாலாஜி அதை செல்போனில் படம் பிடித்து உள்ளார். இதனையடுத்து செல்போனில் படம்பிடித்த புகைப்படத்தை காட்டி அப்பெண்ணை மிரட்டியும் வந்துள்ளார்.

இந்த நிலையில் அந்தப் பெண்ணிற்கு வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடு செய்ய இருந்த நிலையில் பாலாஜி அவரது தந்தையுடன் சென்று, அந்தப் பெண்ணை தன்னை தவிர வேறு யாருக்கும் திருமணம் செய்துக் கொடுக்க கூடாது என கட்டாயப்படுத்தியிருக்கிறார். அப்படி செய்தால் தன்னிடம் உள்ள வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுவிடுவேன் என்றும், ஆசிட் வீசி விடுவேன் என்றும் மிரட்டி உள்ளார். அப்போது பாலாஜியின் தந்தையும் உடனிந்திருக்கிறார். இதனைத்தொடர்ந்து அந்தப் பெண்ணின் பெற்றோர் வளவனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் பாலாஜி மற்றும் அவரது தந்தை சங்கரின் பேரில் வழக்குப்பதிவு செய்து பாலாஜியை கைது செய்துள்ளனர்.

அடுத்த செய்தி