ஆப்நகரம்

கன்னியாகுமரியில் பொறியியல் கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி பலி

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொய்கை அணையில் மூழ்கி தனியாா் பொறியியல் கல்லூரி மாணவர் உயிாிழந்தது குறித்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Samayam Tamil 7 Jul 2019, 4:36 pm
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய் மொழி அருகே தனியாா் பொறியியல் கல்லூரியில் தங்கி படித்து வந்த அபிஷேக் என்ற மாணவன் பொய்கை அணியில் மூழ்கி உயிாிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Samayam Tamil Water Drowning


கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே சத்தியம் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த சிவகங்கையை சேர்ந்த அபிஷேக் என்ற மாணவன் நேற்று தனது நண்பர்களுடன் அருகில் உள்ள பொய்கை அணையில் குளிக்க சென்றுள்ளார்.

அப்போது ஆழமான பகுதியில் அபிஷேக் குளித்து கொண்டிருந்த போது நீரில் மூழ்கியுள்ளார். உடன் இருந்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. இதனையடுத்து ஆரல்வாய்மொழி காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அங்கு வந்த காவல் துறையினா் சுமார் 3 மணி நேரம் போராடி அபிஷேக் உடலை மீட்டனா்.

ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அபிஷேக் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் அபிஷேக்கின் உயிரிழப்புக்கு சத்தியம் பொறியியல் கல்லூரியின் கவனக்குறைவே காரணம் என்று கூறி அவரது உறவினர்கள் ஆரல்வாய்மொழி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தனது மகன் இறப்புக்கு காரணமான கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அடுத்த செய்தி