ஆப்நகரம்

70% பேர் ’பெயில்’ - அதிர்ச்சியில் அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள்!

ஆன்லைன் மூலம் தேர்வெழுதிய மாணவர்களில் நான்கில் மூன்று பங்கு தேர்ச்சி பெறாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Samayam Tamil 14 Apr 2021, 12:56 pm

ஹைலைட்ஸ்:

  • அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியானது
  • 70 சதவீத மாணவர்கள் பெயிலானதால் அதிர்ச்சி
  • முடிவை மறுபரிசீலனை செய்ய மாணவர்கள் வலியுறுத்தல்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Anna University
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் நூற்றுக்கணக்கான பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பயிலும் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகளை நடத்தி முடிவுகளை அறிவித்து சான்றிதழ் வழங்கும் பணிகளை பல்கலைக்கழகம் மேற்கொண்டு வருகிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.
இதையடுத்து கடந்த பிப்ரவரி 1 முதல் மார்ச் 2ஆம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக தேர்வுகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு தேர்வும் 60 நிமிடங்கள் நடைபெற்றன. 2ஆம், 3ஆம் மற்றும் இறுதியாண்டு பயிலும் பொறியியல் மாணவர்கள் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வெழுதினர். ஆன்லைன் தேர்வெழுதும் மாணவர்களை கண்காணிப்பதற்காக பிரத்யேக தொழில்நுட்ப வசதிகள் பயன்படுத்தப் பட்டிருந்தன.

கொளத்தூர் தொகுதியில் புதிய சிக்கல்; மு.க.ஸ்டாலினுக்கு திடீர் தடை!
ஆன்லைன் வாயிலாக தேர்வெழுதும் போது பல்வேறு பிரச்சினைகள் எழுவதாக மாணவர்கள் தரப்பில் புகார் கூறப்பட்டிருந்தது. இவற்றை விரைவாக சரிசெய்வதாக பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் முழு பாடத்திட்டத்தில் இருந்தும் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. ஆன்லைன் தேர்விற்கு 80 சதவீதமும், நேர்முக பதிலளித்தலுக்கு 20 சதவீதமும் மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டன.

குட் நியூஸ் சொன்ன ஷங்கர்: திட்டிக் தீர்க்கும் ரசிகர்கள், ஏன் தெரியுமா?

இந்நிலையில் பொறியியல் தேர்வுகளுக்கான முடிவுகள் கடந்த 12ஆம் தேதி வெளியிடப்பட்டன. அதில், தற்போதைய பாடத்திட்டம் மற்றும் அரியர் பாடங்களுக்கு தேர்வெழுதியவர்களில் 70 சதவீதம் பேர் தேர்ச்சி பெறவில்லை என்று தெரியவந்துள்ளது. வெறும் 30 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது தேர்வில் முறைகேடு, காப்பி அடித்தல், கேமராவை பார்த்து எழுதவில்லை போன்ற 20க்கும் மேற்பட்ட காரணங்களால் தேர்ச்சி பெறவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இனிமே இப்படித்தான்; தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சர்பரைஸ்!
இந்த தேர்வில் தேர்ச்சி பெற எத்தனை மதிப்பெண்கள் என்பதையும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் பொறியியல் மாணவர்கள் கடும் அவதியடைந்துள்ளனர். தேர்வு முறையை மாற்றியமைக்க வேண்டும். தற்போதைய தேர்வு முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி