ஆப்நகரம்

ஜெ.,வை விடுங்கள்; ரேஷன் கடையை பாருங்கள்: அரசை சாடும் மு.க.ஸ்டாலின்

ஜெ.,வை விடுங்கள் என்றும் ரேஷன் கடையில் பொருட்கள் இருக்கிறதா என பாருங்கள் என்றும் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.

TNN 27 Feb 2017, 7:00 pm
சென்னை: ஜெ.,வை விடுங்கள் என்றும் ரேஷன் கடையில் பொருட்கள் இருக்கிறதா என பாருங்கள் என்றும் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.
Samayam Tamil ensure essential commodities at ration shops instead of celebrating jayalalithaa birth
ஜெ.,வை விடுங்கள்; ரேஷன் கடையை பாருங்கள்: அரசை சாடும் மு.க.ஸ்டாலின்


இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஏழை, எளிய மக்களுக்கு அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்காமல் பொது விநியோகத் திட்டத்தை சீர்குலைத்து இருப்பதற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 20 கிலோ இலவச அரிசியும் முழுமையாக கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக 10 கிலோ கோதுமை வழங்கப்படும் என்று அறிவித்து, அதையும் உருப்படியாக வழங்குவதில்லை. தார் கார்டு இணைப்பு, புதிய ரேசன் கார்டுகள் வழங்குவது, கணக்கெடுப்பு நடத்துவது, சர்க்கரைக்கு மானியம் ரத்து என்று பல்வேறு சங்கடங்களில் மூழ்கியுள்ள பொது விநியோகத் திட்டத்தின் கீழ் “விலையில்லா அரிசி” உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதும் இப்போதும் கேள்விக்குறியாகி விட்டது.

ரே‌ஷன் கடைகளுக்கு முறையாக, முழுமையாக அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி மக்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்து, தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தில் கையெழுத்திட்ட ஒரே காரணத்திற்காக தமிழகத்தை வஞ்சிக்கக்கூடாது என்று மத்திய அரசிடம் வாதாடி, தமிழக உரிமைகளை தமிழக அரசு நிலைநாட்ட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

Ensure essential commodities at ration shops instead of ‘celebrating’ Jayalalithaa birth.

அடுத்த செய்தி