ஆப்நகரம்

மத்திய அரசு அவசர கடிதம்... தமிழகத்தில் ரத்தாகிறதா இ-பாஸ் நடைமுறை?

மாநிலத்துக்குள் பயணங்களை மேற்கொள்ள பொதுமக்களை அனுமதிப்பது தொடர்பாக அனைத்து மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் நடைமுறையில் உள்ள இ-பாஸ் முறை ரத்தாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 22 Aug 2020, 6:23 pm
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, பொதுமக்கள் ஒரு மாவட்டத்தில் இருந்து பிற மாவட்டங்களுக்கு அவசரப் பயணங்கள் மேற்கொள்ள இ-பாஸ் நடைமுறை தமிழகத்தில் அமலில் இருந்தது.
Samayam Tamil tn epass


இந்த நடைமுறைக்கு பலதரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் அளிக்கப்படும் என்றும், இருப்பினும் மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், இதுதொடர்பாக அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அவசர கடிதம் அனுப்பியுள்ளது. அதில்," மாநிலத்துக்குள் ஒரு மாவட்டத்தில் இருந்து பிற மாவட்டங்களுக்கு பொதுமக்கள் பயணம் மேற்கொள்ள எவ்வித தடையும் விதிக்கக் கூடாது.

அனைவருக்கும் இ-பாஸ்: முதல்வர் பழனிசாமி அதிரடி அறிவிப்பு!

இதேபோன்று, மாநிலங்களுக்கு இடையேயும் மக்கள் பயணம் மேற்கொள்ளவும், சரக்குப் போக்குவரத்துக்கும் தடை எதுவும் விதிக்கக் கூடாது. இவ்வாறு தடைகள் விதித்தால், அது கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மத்திய அரசு விதித்துள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு எதிரானது. மத்திய அரசின் விதிமுறைகளை மீறுவதாகும்.

போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் பொருளாதாரமும், வேலைவாய்ப்பும் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு, அன்லாக் 3.0 வில் இதில் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்திருந்ததை மாநில அரசுகள் கருத்தில் கொள்ள வேண்டும்" என்று உள்துறை அமைச்சகத்தின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"உள்துறை அமைச்சகத்தின் இந்த அறிவுறுத்தல் குறித்து உரிய ஆலோசனை மேற்கொண்டும், தமிழகத்தில் கொரோனா களநிலவரத்தை கருத்தில் கொண்டும் முடிவெடுக்கப்படும்" என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அமலுக்கு வந்தது அனைவருக்கும் இ பாஸ்: வேறு என்ன சிக்கல்?

அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருந்தாலும், இ-பாஸ் நடைமுறை தற்போது எளிமையாக்கப்பட்டுள்ள நிலையில், உள்துறை அமைச்சகத்தின் இந்த அறிவுறுத்தலையடுத்து இ-பாஸ் முறை முழுவதுமாக ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.

அடுத்த செய்தி