ஆப்நகரம்

அவசியம் வரணும்.. அழைக்கும் இபிஎஸ்: யாரும் போகாதீங்க - தடுக்கும் ஓபிஎஸ்

அதிமுக பொதுக்குழு தொடர்பாக இபிஎஸ், ஓபிஎஸ் மாறி மாறி கடிதம் எழுதி வருகின்றனர்.

Samayam Tamil 22 Jun 2022, 1:09 pm
பொதுக்குழுவுக்கு வருமாறு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ள நிலையில் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் என ஓபிஎஸ் நிர்வாகிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
Samayam Tamil ops eps conflict


அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் கிளம்பியதிலிருந்து எடப்பாடி பழனிசாமிக்கான ஆதரவு அதிகரித்து வந்தது. ஆரம்பத்தில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்த மாவட்டச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகளும் ஒருவர் பின் ஒருவராக எடப்பாடி பழனிசாமியை சந்தித்து முகாம் மாறி வருகின்றனர்.

அதிமுகவில் உள்ள 75 மாவட்டச் செயலாளர்களில் 6 மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவளிப்பதாகவும் மீதமுள்ளவர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவளிப்பதாகவும் தெரிகிறது.

பொதுக்குழு கூட்டத்துக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. காவல்துறையினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
EXCLUSIVE: பொதுக்குழுவுக்கு ஓபிஎஸ் செல்ல மாட்டார் - துக்ளக் ரமேஷ் கணிப்பு!
இந்நிலையில் பொதுக்குழு கூட்டத்துக்கு யாரும் செல்ல வேண்டாம் என ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

இது ஒருபுறமிருக்க எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இல்லை. கட்டாயம் பொதுக்குழு நடைபெறும். ஒருங்கிணைப்பாளர்கள் இருவரும் இணைந்து பொதுக்குழுவில் கலந்துகொள்ள வேண்டும். பொதுக்குழுவுக்கு வாருங்கள், எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் பேசி தீர்த்துக்கொள்ளலாம்” என கடிதத்தில் ஏற்பட்டுள்ளார்.
அதிமுக பொதுக்குழு: பிற்பகலில் நடைபெறும் விசாரணை!
இந்நிலையில் ஓ.பன்னீர் செல்வம் ஜெயலலிதா நினைவிடத்துக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி