ஆப்நகரம்

கல்யாணத்துக்கு பெண் கேட்பது போல... தேமுதிகவை கலாய்த்த முதல்வர்!!

கல்யாணத்துக்கு பெண் கேட்பது போல, கூட்டணி கட்சியினர் ராஜ்யசபா எம்பி சீட் கேட்கின்றனர் என்று தேமுதிகவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கிண்டல் செய்துள்ளார்.

Samayam Tamil 2 Mar 2020, 12:53 am
விருதுநகரில் புதிதாக கட்டப்படவுள்ள மருத்துவக் கல்லூரியின் அடிக்கல் நாட்டு விழா இன்று(மார்ச் 1 மாலை நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதன் பின்னர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது:
Samayam Tamil கல்யாணத்துக்கு பெண் கேட்பது போல... தேமுதிகவை கலாய்த்த முதல்வர்


மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகின்றன. டெல்லிக்கு இணையாக மதுரையிலும் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை வரவுள்ளது.

சிறுபான்மையினருக்கு பாதிப்பில்லை: என்ஆர்சி எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள ஆதார் அட்டை உள்ளிட்ட மூன்று அம்சங்கள் கட்டாயமில்லை என்று மத்திய அரசு தெளிவுப்படுத்தியுள்ளது.

எனவே, இதுகுறித்து சிறுபான்மையினர் யாரும் அச்சடப்பட தேவையில்லை.
இதேபோன்று, தமிழ்மண்ணில் பிறந்த யாருக்கும் சிஏஏவால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

தேமுதிகவுக்கு ‘நோ’ சொன்ன அதிமுக!

நடிகர் கமல் ஹாசனுக்கு சினிமாவைப் பற்றிதான் தெரியும். தமிழக அரசின் எந்தவொரு துறையைப் பற்றியும் அவருக்கு எதுவும் தெரியாது.

சிறப்பான செயல்பாடுகளுக்காக, துறைவாரியாக மத்திய அரசின் விருதுகளை பெறும் அளவுக்கு தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நிர்வாகம் நடைபெற்று வருகிறது. எனவே, தமிழக அரசை கமல் விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை.

அதிமுகவால் விலாசம் பெற்றவர்கள் கட்சிக்கு துரோகம் இழைக்க நினைத்தால், அவர்கள் தங்களின் முகவரியை இழந்துவிடுவார்கள்.

இராமநாதபுரத்தில் மருத்துவக்கல்லூரி... அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்

ஒரு வீட்டில் வயதுக்கு வந்த பெண் இருந்தால், அவரை மணமுடிக்க கேட்பது நம்மூர் வழக்கம். அதுபோல்தான் ராஜ்யசபா எம்.பி. சீட் தங்களுக்கு வேண்டும் என்று கூட்டணிக் கட்சிகள் கேட்கின்றன என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

விரைவில் காலியாக உள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் (ராஜ்ய சபா) பதவிக்கான தேர்தல் வரும் 26 ஆம் தேதி (மார்ச் 26) நடைபெறவுள்ளது.

அந்த ஒரு எம்.பி சீட்; முதலமைச்சருக்கு செக் வைக்கும் தேமுதிக!

இந்த தேர்தலில் அதிமுக சார்பில் மூன்று எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். "கூட்டணி தர்மபடி, இந்த மூன்று எம்.பி. சீட்களில் தங்களுக்கு ஒரு சீட் தரப்பட வேண்டும்" என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அண்மையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி