ஆப்நகரம்

தினகரனுடன் ஈபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ. திடீர் சந்திப்பு

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்எல்ஏ இன்று திடீரென டிடிவி தினகரனுனைச் சந்தித்து பேசினார்.

Samayam Tamil 23 Feb 2018, 10:58 am
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்எல்ஏ இன்று திடீரென டிடிவி தினகரனுனைச் சந்தித்து பேசினார்.
Samayam Tamil eps faction mla prabhu meets ttv dhinakaran
தினகரனுடன் ஈபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ. திடீர் சந்திப்பு


அதிமுக அணிகள் இணைப்புக்கு பின் டிடிவி தினகரன் தனக்கு ஆதரவு அளித்த 18 எம்எல்ஏக்களுடன் தனி அணியாக மாறினார். இதனையடுத்து, அவரது ஆதரவு எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரும் என்றும் அப்போது எடப்பாடி அணியில் உள்ள 'சிலீப்பர் செல்' எல்எல்ஏக்கள் வெளியே வருவார்கள் என்றும் டிடிவி தினகரன் பிதற்றி வருகிறார்.

இச்சூழலில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்எல்ஏ பிரபு வெள்ளிக்கிழமை காலை டிடிவி தினகரனை சந்தித்துள்ளார். தினகரனின் அடையாறு இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்திருக்கிறது. இந்தச் சந்திப்பு ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணியின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி