ஆப்நகரம்

கருணை அடிப்படையில் 20 பேருக்கு வேலை கொடுத்த எடப்பாடி

பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நூலகத்துறையில் 20 பேருக்கு கருணை அடிப்பைடயில் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

Samayam Tamil 2 Feb 2018, 11:53 am
சென்னை: பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நூலகத்துறையில் 20 பேருக்கு கருணை அடிப்பைடயில் பணி நியமன ஆணைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
Samayam Tamil eps hands apl to 20 beneficiaries
கருணை அடிப்படையில் 20 பேருக்கு வேலை கொடுத்த எடப்பாடி


தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற நிகழ்வில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பள்ளிக் கல்வித்துறையின் நூலகப்பிரிவில் பணியாற்றி, பணியின் போது உயிரிழந்த 20 பேரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை அளித்தார்.

மேலும், 32 மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தலா ஒரு பள்ளி வாகனத்தை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். மாவட்டம் தோறும் கல்வித்துறை அதிகாரிகள் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள உதவும் விதமாக இந்த வாகனங்கள் தரப்படுகின்றன. இந்த 32 வாகனங்களுக்காக ரூ.1.92 கோடி செலவிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

அடுத்த செய்தி