ஆப்நகரம்

மெரினாவில் ஜெ., நினைவு மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டு விழா: இபிஎஸ், ஓபிஎஸ் பங்கேற்பு!

ஜெயலலிதா நினைவு மண்டப அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.

Samayam Tamil 7 May 2018, 7:32 am
சென்னை: ஜெயலலிதா நினைவு மண்டப அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.
Samayam Tamil Jaya Memorial
ஜெயலலிதா நினைவு மண்டபம்


மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சமாதி, சென்னை மெரினாவில் அமைந்துள்ளது. அங்கு கலை வேலைப்பாட்டுடன் கூடிய நினைவு மண்டபம் கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா, இன்று நடைபெறுகிறது. முன்னதாக நினைவு மண்டப அடிக்கல் நாட்டு விழாவிற்கான யாகசாலை பூஜை நடைபெற்றது.

அதில் முதலமைச்சர் பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று முன்னிலை வகித்தனர்.

அவர்களுடன் அமைச்சகள் கடம்பூர் ராஜூ, காமராஜ், செங்கோட்டையன், வேலுமணி, சண்முகம், செல்லூர் ராஜு, மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் பீனிக்ஸ் பறவை வடிவில் அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

EPS, OPS attended Jayalalitha memorial hall function at chennai Marina Beach.

அடுத்த செய்தி