ஆப்நகரம்

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் அதிமுக விநாயகர் சதுர்த்தி வாழ்த்து

அனைவருக்கும்‌ புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜீ.ஆர்‌., புரட்சித்‌ தலைவி அம்‌ ஆகியோரது வழியில்‌, எங்களது விநாயகர்‌ சதுர்த்தி நல்வாழ்த்துகளை மீண்டும்‌ ஒருமுறை மகிழ்ச்சியோடு உரித்தாக்கிக்‌ கொள்கிறோம்‌.

Samayam Tamil 21 Aug 2020, 12:07 pm
நாடு முழுக்க நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சிலை வைத்து வழிபட தமிழக அரசு தடை விதித்ததுடன், வீடுகளிலேயே கொண்டாடவும் அறிவுறுத்தியுள்ளது.
Samayam Tamil eps ops


இந்நிலையில், தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் அனைவருக்கும் முதல்வர் மற்றும் துணை முதல்வர், வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “முழுமுதற்‌ கடவுளாம்‌ ஸ்ரீவிநாயகப்‌ பெருமான்‌ அவதரித்த திருநாளான விநாயகர்‌ சதுர்த்தியை பக்தியுடனும்‌, மன மகிழ்ச்சியுடனும்‌ கொண்டாடி மகிழும்‌ அனைவருக்கும்‌ எங்களது நெஞ்சார்ந்த விநாயகர்‌ சதுர்த்தி நல்வாழ்த்துகளைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌.

சங்கடங்களையும்‌, தடைகளையும்‌ நீக்கவல்ல விநாயகப்‌ பெருமானை வணங்கி, அவர்‌ திருவடி சரண்‌ அடைபவர்களுக்கு, நல்ல சொல்‌ வளம்‌, பொருள்‌ வளம்‌, மன வளம்‌, உடல்‌ நலம்‌ ஆகிய அனைத்து வளங்களும்‌ உண்டாகும்‌.

மாணவர் சேர்க்கை தொடக்கம்: இன்று முதல் பள்ளிகளில் சேர்க்கலாம்

ஒவ்வொரு ஆண்டும்‌ ஆவணி மாதம்‌ வளர்பிறை சதுர்த்தி திதி அன்று மக்கள்‌ தங்கள்‌ இல்லங்களில்‌ களிமண்ணால்‌ செய்யப்பட்ட விநாயகர்‌ சிலையை வைத்து, அருகம்‌ புல்லோடு எருக்கம்‌ பூ, அரளி மலர்‌ மாலைகள்‌ சூட்டி, கொழுக்கட்டை, சுண்டல்‌, பொரி, அவல்‌ போன்றவற்றைப்‌ படைத்து பக்தியுடன்‌ வழிபட்டு, விநாயகர்‌ சதுர்த்தியைக்‌ கொண்டாடி மகிழ்வார்கள்‌.

கேட்கும்‌ வரத்தைக்‌ கொடுக்கும்‌ கடவுளாகக்‌ கருதப்படும்‌ வேழமுகத்து விநாயகப்‌ பெருமானின்‌ அருளால்‌, அனைவருக்கும்‌ அனைத்துக்‌ காரியங்களிலும்‌ வெற்றி கிட்டட்டும்‌. அன்பும்‌, அமைதியும்‌ நிலவட்டும்‌. நாடெங்கும்‌ நலமும்‌ வளமும்‌ பெருகட்டும்‌; இல்லந்தோறும்‌ இன்பமும்‌, மகிழ்ச்சியும்‌ பொங்கட்டும்‌ என்று வாழ்த்தி, அனைவருக்கும்‌ புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜீ.ஆர்‌., புரட்சித்‌ தலைவி அம்‌ ஆகியோரது வழியில்‌, எங்களது விநாயகர்‌ சதுர்த்தி நல்வாழ்த்துகளை மீண்டும்‌ ஒருமுறை மகிழ்ச்சியோடு உரித்தாக்கிக்‌ கொள்கிறோம்‌.

அடுத்த செய்தி