ஆப்நகரம்

சின்னம் கிடைச்சாச்சு! ஜெ., நினைவிடத்தில் எடப்பாடி கும்பிடு!

முடக்கப்பட்ட அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தைக் கைப்பற்றியுள்ளதைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா நினைவிடத்திற்கு என்று மரியாதை செலுத்தினார்.

TNN 23 Nov 2017, 5:02 pm
முடக்கப்பட்ட அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தைக் கைப்பற்றியுள்ளதைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா நினைவிடத்திற்கு என்று மரியாதை செலுத்தினார்.
Samayam Tamil eps to visit jayalalithaa memorial as they secure twin leaves symbol
சின்னம் கிடைச்சாச்சு! ஜெ., நினைவிடத்தில் எடப்பாடி கும்பிடு!


இரட்டை இலை யாருக்கு என்பது குறித்து விரைந்து முடிவு காண கடந்த அக்டோபர் 6ஆம் தேதி டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

பல நாட்கள் நடைபெற்ற இந்த விசாரணைக்கு பின், இன்று தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஒதுக்கியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆசியால் தங்களுக்கு இரட்டை இலைச் சின்னம் திரும்பக் கிடைத்திருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து டிடிவி தினகரன் தரப்பு நீதிமன்றத்திற்குச் செல்லப்போவதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்திற்குச் சென்று ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

அடுத்த செய்தி