ஆப்நகரம்

பனைத் தொழிலாளர்களுக்கு உதவித் தொகை: முதல்வரிடம் செல்லும் கோரிக்கை!

பனை தொழிலாளர்களுக்கு உதவி தொகை வழங்க முதல்வரிடம் கோரிக்கை வைக்க இருப்பதாக எர்ணாவூர் நாராயணன் கூறியுள்ளார்.

Samayam Tamil 16 Jun 2022, 1:00 pm
தமிழக அரசால் தமிழ்நாடு பனை தொழிலாளர் நல வாரிய தலைவராக நியமிக்கப்பட்ட எர்ணாவூர் நாராயணன் சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
Samayam Tamil ernavur narayanan


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எர்ணாவூர் நாராயணன், தமிழ்நாடு பனைமரம் தொழிலாளர் நலவாரிய தலைவராக முதல்வர் நேற்று அறிவித்தார், எனவும் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றதாகவும் தெரிவித்தார்.

மேலும் பனை தொழிலாளர் வாரியம் 2006ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதியால் தொடங்கப்பட்டதாகவும், கடந்த 10 ஆண்டுகளாக இருந்த அரசு, வாரியத்தை கைவிட்ட நிலையில் தற்போது அந்த வாரியம் புதுப்பிக்கப்பட்டு தலைவராக முதல்வர் தன்னை நியமித்து இருப்பதாகவும் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமிக்கு மாணவரணி ஆதரவு: ஓபிஎஸ் தீவிர ஆலோசனை!
திமுக அரசு பெறுப்பேற்றதும் பனை மரம் வெட்ட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் அனுமதி பெற்றே பனை மரம் வெட்ட வேண்டும் என உத்தரவிடபட்டுள்ளது எனவும், கருப்பட்டியை நியாயவிலை கடைகளில் விற்பனை செய்ய நடபடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேகதாது அணை விவகாரம்: தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்!
மீன்பிடி தடைகாலத்தில் மீனவர்களுக்கு நிவாரண தொகை வழங்குவது போல பனை தொழிலாளர்களுக்கு உதவி தொகை வழங்க முதல்வரிடம் கோரிக்கை வைக்க இருப்பதாகவும், புதியதாக பனை மரம் நடுவதற்கான ஏற்பாடுகள் செய்வோம் எனவும் தெரிவித்தார்.

அடுத்த செய்தி