ஆப்நகரம்

Fact Check: மாலை நேர சிறப்பு வகுப்புகள்... நாங்கள் எந்த சுற்றறிக்கையும் அனுப்பவில்லை: ஈரோடு முதன்மைக் கல்வி அலுவலகம்

ஈரோடு முதன்மைக் கல்வி அலுவலரைத் தொடர்பு கொண்டு நாம் (சமயம் தமிழ்) பேசியபோது, “நாங்கள் எதுவும் அப்படி சுற்றறிக்கை அனுப்பவில்லை” என்று தெரிவித்தனர்.

தமிழகத்தில் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை வேளைகளில் சிறப்பு வகுப்புகள் எதுவுமில்லை என தொடக்க கல்வி இயக்குநரகரம் விளக்கம் அளித்துள்ளது.
Samayam Tamil 8th public exam 202o


கடந்த சில வாரங்களாகவே, பள்ளிக்குழந்தைகளின் தேர்வு விவகாரத்தில் விளையாடிக்கொண்டிருக்கிறது கல்வித்துறை. ‘தேர்வு உண்டு, தேர்வு இல்லை. கட்டணம் உண்டு, கட்டணம் இல்லை’ என தொடர்ந்து மாறி மாறி தகவலளித்து வந்த கல்வித்துறை இப்போது அடுத்த குழப்பத்தை ஆரம்பித்திருக்கிறது.

இந்த ஆண்டு, பொதுத்தேர்வு கட்டாயமாக நடக்க இருப்பதால் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலைநேரத்தில் 1 மணி நேரம் சிறப்பு வகுப்பு நடத்தப்பட வேண்டும். தினமும் மாலை அதற்காக 30 மதிப்பெண்கள் கொண்ட சிறுதேர்வுகள் நடத்த வேண்டும் என்று ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியிருந்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாங்கள் எதுவும் அப்படி சுற்றறிக்கை அனுப்பவில்லை. நாங்கள் சம்பந்தப்பட்ட பிரிவுக்கும் பேசிவிட்டோம். இந்த தகவல் உறுதியானது. ஈரோடு மாவட்ட ரெகுலர் சி.இ.ஓ. அலுவலகத்தில் இருந்து எந்த சுற்றறிக்கையும் அனுப்பபடவில்லை.
முதன்மைக் கல்வி அலுவலகம், ஈரோடு

இந்த சுற்றறிக்கையால் ஆசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சி அதிர்ச்சி அடைந்தனர் என்று செய்திகள் பரவி வந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை வேளைகளில் சிறப்பு வகுப்புகள் எதுவுமில்லை இல்லை என விளக்கம் அளித்துள்ளது.

8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தவுள்ளதை அடுத்து மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும் என பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தொடக்க கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், “அப்படி எதுவும் உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்று தொடக்க கல்வி இயக்குநர் சார்பில் விளக்கம் வெளியாகியுள்ளது.



இதுகுறித்து விளக்கம் கேட்க ஈரோடு முதன்மைக் கல்வி அலுவலரைத் தொடர்பு கொண்டு பேசியபோது, “நாங்கள் எதுவும் அப்படி சுற்றறிக்கை அனுப்பவில்லை. நான் சம்பந்தப்பட்ட பிரிவுக்கும் பேசிவிட்டேன். இந்த தகவல் உறுதியானது. ஈரோடு மாவட்ட ரெகுலர் சி.இ.ஓ. அலுவலகத்தில் இருந்து எந்த சுற்றறிக்கையும் அனுப்பபடவில்லை” என்று அலுவலக அதிகாரி தெரிவித்தார்.

அடுத்த செய்தி