ஆப்நகரம்

ரேஷன் அட்டையை ஒப்படைத்து பேராட்டம்

ஈரோட்டில் நியாயவிலை கடைக்கு பதிலாக நூலகம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரேஷன் அட்டையை ஒப்படைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Samayam Tamil 14 May 2018, 10:07 pm
ஈரோட்டில் நியாயவிலை கடைக்கு பதிலாக நூலகம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரேஷன் அட்டையை ஒப்படைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Samayam Tamil chennai ration shop


ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள பட்டக்காரனை பகுதி மக்கள், தங்களுக்கு பகுதி நேர நியாய விலைக்கடை அமைக்க கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த கோரிக்கையை ஏற்ற மாவட்ட நிர்வாகம், 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நியாயவிலைக்கட்டத்தை அமைத்தது

ஆனால், நியாயவிலைக்கடை அமைக்கப்படும் இடத்தில் நூலகம் அமைக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் திடீரென அறிவித்தது. இதனால், ஆத்திரமடைந்த மக்கள், தங்களது ரேஷன் கார்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். மீண்டும் பகுதிநேர நியாயவிலைக்கடை அமைக்க வலியுறுத்தி நடத்திய போராட்டத்தில் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்த செய்தி