ஆப்நகரம்

தேசிய மாநாட்டில் ஈரோடு பழங்குடி சிறுவனுக்கு இளம் விஞ்ஞானி விருது!

குஜராத்தில் நடந்த தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில், ஈரோட்டைச் சேர்ந்த பழங்குடி மாணவருக்கு இளம் விஞ்ஞானி விருது கிடைத்துள்ளது.

Samayam Tamil 4 Jan 2018, 2:33 pm
குஜராத்தில் நடந்த தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில், ஈரோட்டைச் சேர்ந்த பழங்குடி மாணவருக்கு இளம் விஞ்ஞானி விருது கிடைத்துள்ளது.
Samayam Tamil erode tribal student get young scientist award
தேசிய மாநாட்டில் ஈரோடு பழங்குடி சிறுவனுக்கு இளம் விஞ்ஞானி விருது!


குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், கடந்த டிசம்பர் 27 முதல் 31ம் தேதி வரையில், 25 வது தேசிய அறிவியல் மாநாடு நடந்தது. குஜராத் முதல்வர் விஜய் ரூபானி துவங்கி வைத்த இந்த மாநாட்டில், 6 ஆசிய நாடுகளில் இருந்தும், இந்தியாவில் 30 மாநிலங்களிலிருந்தும் மாணவர்களிடம் இருந்து ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்க்கப்பட்டன.

தமிழகத்திலிருந்து 30க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டதில், 2 கட்டுரைகள் மட்டும் மாநாட்டுக்கு தேர்வு செய்யப்பட்டு, பிரசுகிக்கப்பட்டது.

இதில், ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பகுதி குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பள்ளி மாணவர்களின் கட்டுரை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மலைப்பகுதியில் போக்குவரத்து வசதி இல்லாததால், ஏற்படும் ஆற்றல் இழப்புகள் எனும் தலைப்பில் அனுப்பப்பட்ட இந்த ஆய்வுக்கட்டுரை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

இதையடுத்து, அந்த ஆய்வுக்கட்டுரை தயாரித்த குழு தலைவரான 7ம் வகுப்பு படிக்கும் மாணவன் எம். சின்னக்கண்ணன், தேசிய அறிவியல் மாநாட்டில் பங்கேற்றார்.

அங்கு இவனது ஆய்வுகட்டுரையை பாராட்டிய அறிவியல் அறிஞர்கள், இளம் விஞ்ஞானி பட்டத்தையும், பரிசையும் கொடுத்து கவுரவித்தார்கள்.

பழங்குடி மாணவனான எம். சின்னக்கண்ணனுக்கு, இன்று ஈரோடு கலைக்கல்லூரி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

அடுத்த செய்தி