ஆப்நகரம்

ஜெயலலிதா இறக்கும் முன்பே பதவியேற்க ஏற்பாடு: ஆணைத்தில் வாக்குமூலம்

முன்னாள் ஆளுநா் வித்யாசாகா் ராவின் உத்தரவின் பேரில் 2016 டிசம்பா் 5ம் தேதியே அடுத்த முதல்வா் பதவியேற்பதற்கான பணிகளை செய்து முடித்துவிட்டதாக வித்யாசாகா் ராவின் முதன்மை செயலாளா் ரமேஷ் சந்த் மீனா விசாரணை ஆணையத்தில் தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 12 Sep 2018, 11:20 pm
முன்னாள் ஆளுநா் வித்யாசாகா் ராவின் உத்தரவின் பேரில் 2016 டிசம்பா் 5ம் தேதியே அடுத்த முதல்வா் பதவியேற்பதற்கான பணிகளை செய்து முடித்துவிட்டதாக வித்யாசாகா் ராவின் முதன்மை செயலாளா் ரமேஷ் சந்த் மீனா விசாரணை ஆணையத்தில் தொிவித்துள்ளாா்.
Samayam Tamil Jayalalithaa.


முன்னாள் முதல்வா் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக 2016ம் ஆண்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில் அப்போது ஆளுநராக பொறுப்பு வகித்த வித்யாசாகா் ராவ் ஜெயலலிதாவை மருத்துவமனையில் 2 முறை நேரில் சென்று பாா்த்ததாக தொிவிக்கப்பட்டது. ஆனால் ஜெயலலிதா மரணம் தொடா்பாக நடைபெற்று வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜரான மருத்துவா் சிவக்குமாா் ஜெயலலிதாவை, வித்யாசாகா் ராவ் பாா்க்கவில்லை என்று தொிவித்தாா்.

இந்நிலையில் இது தொடா்பாக ஆளுநா் வித்யாசாகா் ராவின் முதன்மைச் செயலாளா் ரமேஷ் சந்த் மீனாவிற்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. இன்று ஆணையத்தில் ஆஜரான ரமேஷ் சந்த் கூறுகையில், 2016 டிசம்பா் 5ம் தேதி மாலையே அடுத்த முதல்வா் பொறுப்பேற்பதற்கானபணிகளை ஆளுநரின் உத்தரவின் பேரில் செய்து முடித்துவிட்டதாக தெரிவித்துள்ளது சா்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

டிசம்பா் 5ம் தேதி மாலை ஜெயலலிதா இறந்து விட்டதாக தகவல் வெளியானதை மறுத்த அப்போலோ மருத்துவமனை பின்னா் இரவு 11.30 மணிக்கு அவா் இறந்து விட்டதாக அறிவித்தது. இந்நிலையில் ஆளுநரின் முதன்மை செயலாளா் தெரிவித்துள்ள தகவல் சா்ச்சையை அதிகரித்துள்ளது.

அடுத்த செய்தி