ஆப்நகரம்

தனி நபருக்கு பாலாபிஷேகம் ஏற்புடையதல்ல : ஐ.ஏ.எஸ் சகாயம்!

சென்னை: தனி நபருக்கு பாலாபிஷேகம் போன்ற சம்பவங்கள் ஏற்புடையதல்ல என ஐ.ஏ.எஸ் சகாயம் தெரிவித்துள்ளார். ஏழைகளுக்கு தமிழ் வழிக்கல்வியும், பணக்காரர்களுக்கு ஆங்கில வழிக்கல்வியும் சமுதாயத்திற்கு ஆரோக்கியமானது அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Samayam Tamil 3 Dec 2018, 1:48 pm
தேனியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் கூறுகையில், ‘ தமிழகத்துக்கு டெல்லி எதுவும் கொடுக்காது. விருதுகள் திட்டமிட்டு கொடுக்கப்படுகிறது. முதல் முறையாக வழங்கப்பட்ட சிறந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி விருதை தயக்கத்துடன் பெற்றேன்.
Samayam Tamil 7


தமிழ் சமுதாயத்தில் போலி அதிகம் உலாவுகிறது. கல்வியறிவு அதிகம் உள்ள தமிழ்நாட்டில் தனி நபருக்கு பாலாபிஷேகம் சம்பவங்கள் நடப்பது ஏற்புடையதல்ல.
ஏழைகளுக்கு தமிழ் வழிக்கல்வியும், பணக்காரர்களுக்கு ஆங்கில வழிக்கல்வியும் சமுதாயத்திற்கு ஆரோக்கியமானது அல்ல. என்றார்.

அடுத்த செய்தி