ஆப்நகரம்

தீபா முதல்வராக ஆசைப்படும் போது, கமல் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது? - நல்லகண்ணு கேள்வி

தீபா முதல்வராக ஆசைப்படும் போது, கமல் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது? - நல்லகண்ணு கேள்வி

TNN 21 Jul 2017, 9:04 am
திருச்சி : அரசியல் என்பது யாருக்கும் பட்டா போட்டு கொடுக்கப்படவில்லை, யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என கம்யூனிஸ்ட் முத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.
Samayam Tamil everybody can enter into politics no restriction nallakannu
தீபா முதல்வராக ஆசைப்படும் போது, கமல் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது? - நல்லகண்ணு கேள்வி


தமிழக அரசுக்கு எதிராக நடிகர் கமல் அடுத்தடுத்து விமர்சித்து வருவதால், அமைச்சர்கள், பாஜகவினர் கொதிப்படைந்துள்ளனர். கமல் அரசியலுக்கு தகுதியற்றவர், எங்களையும், அரசை விமர்சிக்க தகுதியில்லை, என பல அமைச்சர்கள் தெரிவித்து வருகின்றனர்.

நல்லகண்ணு ஆதரவு:

அரசியல் என்பது யாருக்கும் பட்டா போட்டு கொடுக்கப்படவில்லை. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ரஜினி கூட அரசியிலுக்கு வர நினைத்தார். வரட்டுமே...முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்த பிறகு எல்லாரும் முதலமைச்சர்ன்னு போட்டுக்கிறாங்க.

தீபா கூட முதலமைச்சரா வரனும்னு ஆசைப்பட்டாங்க. அது அவங்க இஷ்டம். அதனால் கமல் அரசியலுக்கு வரக்கூடாதுன்னு எப்படி சொல்ல முடியும். அவரும் வரலாம். என நல்லகண்ணு தெரிவித்துள்ளார்

அடுத்த செய்தி