ஆப்நகரம்

அப்பாடா, உள்ளாட்சித் தேர்தல் நடக்கபோகுதுப்பா!

உள்ளாட்சித் தேர்தல் நவம்பர் மாத இறுதிக்குள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ...

Samayam Tamil 25 Sep 2019, 12:46 pm
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் 2016ஆம் ஆண்டு முதல் நடக்காமல் உள்ளது. தேர்தலை நடத்துவதை தாமதித்துவந்த தமிழக அரசு, சம்பந்தப்பட்ட ஊராட்சி அலுவலர்களின் கால அவகாசத்தை மட்டும் தொடர்ந்து நீட்டித்து வந்தது.
Samayam Tamil b73517abe486dd2f18548e620a9f3a8c


இதனால், திமுக உட்பட சிலர் உள்ளாட்சித் தேர்தலைத் தமிழகத்தில் உடனடியாக நடத்த வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் தமிழகத்தில் விரைந்து உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என ஒரு உத்தரவை பிறபித்தது. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தல் நடத்தும் பணிகளைத் தொடங்கியது.

இந்நிலையில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பை நேற்று நடத்தியபோது, “உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதுக்கு இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் வாக்கு இயந்திரங்கள் கேட்கப்பட்டுள்ளது” எனத் தகவல் அளித்திருந்தார். இதற்கிடையில், வரும் நவம்பர் மாதத்துக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும், என முன்பே அறிவிந்திருந்தார்.

மேலும், சாஹூ நிருபர்களிடம் நேற்று கூறுகையில், “உள்ளாட்சித் தேர்தலுக்கு, எத்தனை இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்ற தகவலை விரைவில் அறிவிப்பேன். உள்ளாட்சித் தேர்தலுக்கு ‘விவிபேட்’ இயந்திரங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது” என்றிருந்தார்.

தமிழக தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டிருந்ததன் அடிப்படையில், இந்தியத் தேர்தல் ஆணையம் இயந்திரங்களைக் கோவை மாவட்ட இருப்பு மையத்திலிருந்து எடுத்துக் கொள்ள அனுமதி அளித்திருந்தது. அனுமதி பெற்றதைத் தொடர்ந்து இயந்திரங்களை, காலை முதல் மாவட்டம் வாரியாக பிரித்து அனுப்பும் பணியை தமிழக தேர்தல் ஆணையம் தொடங்கியது. இந்த பணிகளை மாநில தேர்தல் அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அனைத்து இடங்களிலும், மின்னணு வாக்கு இயந்திரங்களில் நடத்தப்படுவதில்லை எனக் கூறப்பட்டுள்ளது. அதன்படி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் தேர்தல் நடத்தப்படும். அதே நேரத்தில், கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்களில் வாக்குச்சீட்டு முறையே கடைப்பிடிக்கப்படும்.

அடுத்த செய்தி