ஆப்நகரம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முன்னாள் போலீஸ் அதிகாரி கைது

மதுரையில் 4ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

Samayam Tamil 21 Jul 2018, 7:03 pm
மதுரையில் 4ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil rape_f504da08-e087-11e6-84f6-f9b2ee092ea6


மதுரை ஆத்திகுளத்தைச் சேர்ந்த சிறுமி சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, ஓய்வு பெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர் திரவியம் சிறுமியை தன் வீட்டிற்குள் அழைத்துள்ளார். உள்ளே சென்ற சிறுமிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், சிறுமி உதவி கேட்டு வீட்டிலிருந்து தப்பி வெளியே வந்துள்ளார். அவரது குரல் கேட்டு அப்பகுதியின் அங்கே திரண்டு திரவியத்தை வீட்டிற்குள் வைத்து பூட்டியுள்ளனர்.

தல்லாகுளம் போலீசாருக்கு இது பற்றி தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் பேரில் திரவியத்தை போலீசார் கைது செய்தனர்.

அடுத்த செய்தி