ஆப்நகரம்

பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீடு: தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு..!

பிளஸ் டூ மாணவர்கள் 10ம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்ணை சரிபார்த்து இணையத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 24 Jun 2021, 7:56 pm
தமிழகத்தில் கொரோனா பரவல் எச்சரிக்கையாக கடந்த ஆண்டு மார்ச் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்களுக்கு தொலைக்காட்சி மூலமாகவும், இணையதளம் மூலமாகவும் பாடம் நடத்தப்பட்டு வந்தது. இருப்பினும் மாணவர்களுக்கு அதனால் ஏற்பட்ட சிரமங்களைக் கருத்தில் கொண்டு, பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன.
Samayam Tamil கோப்புப்படம்


மேலும், கொரோனா காலத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொண்ட அசாதாரண சூழ்நிலை மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையைக் கருத்தில் கொண்டும், 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும், முழு ஆண்டுத் தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுகள் ஏதுமின்றி தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது.

அதே சமயம் பிளஸ் 2 வகுப்பிற்கு பொதுத்தேர்விற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா பரவலால் தேதி தள்ளிவைக்கப்பட்டது. தொடர்ந்து, பிளஸ் 2 தேர்வுகளை நடத்தலாமா வேண்டாமா என்பதான ஆலோசனைகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் தமிழகத்தில் 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு ரத்து செய்த அரசு, மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கிட குழு அமைத்து பரிந்துரை செய்யலாம் என்று உத்தரவிட்டது.

பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தலைமையில், அந்த குழுவில் உயர்கல்வித் துறை செயலாளர், சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழு மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து ஆய்வு செய்து, விரைவில் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும்.

மன்மோகன் சிங்கை விட மோடி கம்மியா குடுக்குறாரு: ஜோதிமணி குற்றச்சாட்டு!

அந்த அறிக்கையின் அடிப்படையில், 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதித் தேர்வு மதிப்பெண் வழங்கப்படும். அவ்வாறு வழங்கப்படும் மதிப்பெண்களைக் கொண்டு மட்டுமே, தமிழகத்திலுள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் சேர்க்கை நடைபெறும். இந்நிலையில், +2 மதிப்பெண் கணக்கீட்டிற்கு தேவைப்படுவதால் 10ஆம் வகுப்பு மதிப்பெண்களை சரிபார்த்து இணையத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் என தேர்வுத்துறை இயக்குனரகம் அனைத்து மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

அடுத்த செய்தி