ஆப்நகரம்

ரஜினி சொன்னால் சரியாக இருக்கும்: இயக்குநர் தங்கர்பச்சான் சமயம் தமிழுக்கு சிறப்பு பேட்டி!

நடிகர் ரஜினியின் அரசியல் வருகை குறித்து இயக்குநர் தங்கர்பச்சான் அளித்த சிறப்பு பேட்டியை இங்கே காணலாம்.

Samayam Tamil 4 Dec 2020, 4:11 pm
ரஜினிகாந்த் வருகையை வரவேற்று தனது ட்விட்டரில் கருத்து பதிவிட்டது குறித்து இயக்குனர் தங்கர் பச்சானிடம் பேசினோம். அப்போது பதிலளித்த அவர், தன்னை வளர்த்துவிட்ட மண்ணுக்கும், மக்களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்று ரஜினி நினைக்கிறார். சம்பாதிப்பதற்காகவோ, சொத்து சேர்க்கவோ அவர் அரசியலுக்கு வரவில்லை. ரஜினி சொன்னால் சரியாக இருக்கும் என்று மக்கள் நினைக்கிறார்கள். அதேசமயம் ரஜினிக்கு நிறைய சவால்கள் இருக்கின்றன. அதைச் சமாளிக்கும் திறனும் அவரிடம் உள்ளது. இப்போதுள்ளவர்கள் தொண்டு செய்வதற்காக அரசியல் கட்சி வைத்திருக்கிறேன் என யாராவது சொல்ல முடியுமா?
Samayam Tamil Thangar Bachan


எவ்வளவு பணமிருக்கிறது என கேட்டுத் தான் சீட் கொடுக்கிறார்கள். நேர்மையான இளைஞர்களை நான் தருகிறேன். பெரிய கட்சிகள் அவர்களுக்கு சீட் தருமா என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், இப்போது இருக்கும் அரசியல் கட்சிகள் நிறுவனங்கள் போல் செயல்படுவதாக சாடினார்.

மேலும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் 60% குற்றவாளிகளே நிறைந்திருப்பதாக விமர்சித்தார். அரசியல் கட்சிகள் இணையக் கூலிகளை வைத்து வேலை செய்கின்றன எனவும், பொய்யான செய்திகளை அவர்கள் பரப்புவதாகவும் கவலை தெரிவித்தார்.

ஜாதி, மத கலப்பில்லாத ஆன்மிக அரசியலா; எப்படி சாத்தியம் மிஸ்டர் ரஜினி?

ரஜினியின் உடல்நலம் முக்கியம் என சொல்லியிருக்கிறேன். மக்களுக்காக தன் உயிர் போனாலும் பரவாயில்லை என்கிறார். ரஜினிகாந்த் பசியை உணர்ந்தவர். மக்களின் நிலை அவருக்கு தெரியும் என்றார். விளிம்புநிலை மக்களுக்காக போராடி வருகிறேன்.

எனக்கு அரசியல் ஆசை இல்லை. 15 ஆண்டுகளுக்கு முன்பே எனக்கு பல வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் அதை நான் ஏற்கவில்லை. அடிப்படையில் இருந்து எல்லாம் மாற வேண்டும். பொறுத்திருந்து பார்ப்போம் என்று தங்கர் பச்சான் கூறினார்.

அடுத்த செய்தி