ஆப்நகரம்

ஏமாற்றம் அளித்த வடகிழக்கு பருவமழை? ஆச்சரியம் தரும் பின்னணி காரணம்!

தமிழகத்தில் நடப்பாண்டில் கணிக்கப்பட்ட வடகிழக்குப் பருவமழை போதிய அளவு பெய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கான காரணம் குறித்து இங்கே காணலாம்.

Samayam Tamil 17 Nov 2019, 9:26 am
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகம் கடும் தண்ணீர் பஞ்சத்தில் சிக்கி தவித்தது. காலிக் குடங்களுடன் மக்கள் அலைவதைக் காண முடிந்தது. தலைநகர் சென்னையில் அதிகரித்து காணப்படும் மக்களின் தேவையை பூர்த்தி செய்ய அண்டை மாவட்டங்களில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டது.
Samayam Tamil Rain


ஆழ்துளைக் கிணறுகளிலும் தண்ணீர் ஆழத்திற்கு சென்றதால் மக்கள் வேதனை அடைந்தனர். இதனைத் தொடர்ந்து தென்மேற்கு பருவமழை தொடங்கியது. தமிழகம் முழுவதும் மழை வெளுத்து வாங்கியது.

நள்ளிரவில் கொட்டித் தீர்த்த மழை; சில்லென்று வீசிய காற்றால் சென்னை மக்கள் குஷி!

வறண்டு கிடந்த நிலங்கள் புத்துயிர் பெற்றன. காலியாக இருந்த நீர் நிலைகள் நிரம்பி வழிந்தன. இதனால் வெளியேற்றப்பட்ட உபரி நீர் குடிநீர் தேவைக்கும், பாசனத் தேவைக்கும் பயன்படுத்தப்பட்டது.

ஆழத்திற்கு இறங்கி போன தண்ணீர் மேலெழும்பி வந்தது. பருவமழையின் இறுதியில் சராசரியை விட அதிக மழை பெய்திருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

இதற்கடுத்து சிறிய இடைவெளிக்கு பின் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதுவும் தென்மேற்கு பருவமழை போன்று இயல்பை விட அதிகளவு பொழியும் என்று கணிக்கப்பட்டது.

இன்று புரட்டி எடுக்கப் போகும் மழை - 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

ஆனால் வடகிழக்கு பருவமழை ஏமாற்றம் அளித்துவிட்டது என்றே கூறலாம். இந்த மழை தமிழகம் மற்றும் ஆந்திராவிற்கு நேரடியாக மழைப் பொழிவை தரக்கூடியது. எனவே நீர் நிலைகள், குடிநீர் தேவை, பாசன விவசாயம் ஆகியவற்றிற்கு பெரிதும் உதவிகரமாக அமையும்.

அப்படிப்பட்ட நிலையில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததற்கு வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் முக்கிய காரணத்தை முன்வைத்தனர். அதாவது வங்கக் கடல், அரபிக் கடலில் புல்புல் புயல், மஹா புயல் உள்ளிட்டவை தோன்றின.

இவை காற்றழுத்த தாழ்வு நிலையை வேறு திசை நோக்கி இழுத்துச் சென்றுவிட்டதாகவும், இதனால் வடகிழக்கு பருவமழை போதிய மழையை தரவில்லை என்றும் விளக்கம் அளித்தனர். அதேசமயம் ஒரு நன்மையும் அரங்கேறி இருக்கிறது.

உருவாகியது காற்றழுத்த தாழ்வுநிலை: வெளுத்துக் கட்டப் போகும் கனமழை!

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்று மாசடைந்து காணப்பட்டது. புயல் காரணமாக மாசடைந்த காற்று வேறு பக்கம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக வானிலை வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர். வருங்கால தேவையை கருத்திக் கொண்டு, கிடைக்கும் மழை நீரை பொதுமக்கள் சேமித்து கொள்ள வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.

அடுத்த செய்தி