ஆப்நகரம்

கொத்தடிமையாக சித்ரவதை; தாய்லாந்து தமிழனை மீட்க ஸ்கெட்ச் போட்ட ஜெய்சங்கர்!

தாய்லாந்து நாட்டில் கொத்தடிமையாக சித்ரவதைக்கு ஆளாக்கப்படும் தமிழனை மீட்க, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 26 Jun 2019, 5:10 pm
திருப்பூர் மாவட்டம் குளத்துப்பாளையத்தைச் சேர்ந்த சகோதரர்கள் மணித்துரை(23), மணிகண்டன்(21). இவர்கள் அவிநாசியை சேர்ந்த ரஞ்சித் என்பவரிடம் ரூ.2.70 லட்சம் அளித்து, தாய்லாந்தில் உள்ள பனியன் கம்பனிக்கு வேலைக்குச் சென்றனர்.
Samayam Tamil Jaishankar


ஆனால் அங்கு ஓட்டல் ஒன்றில் வேலைக்கு சேர்க்கப்பட்டனர். அங்கு முறையாக சம்பளம் வழங்கப்படவில்லை. மேலும் கொத்தடிமைகளாக பெரும் சித்ரவதைக்கு ஆளாகியுள்ளனர்.

இந்த சூழலில் சகோதரர்களின் தாய் மாரியம்மாள், ஓட்டல் உரிமையாளருக்கு ரூ.88,000 அளித்து மணிகண்டனை மீட்டுள்ளார். ஆனால் மணித்துரையை மீட்க முடியவில்லை.

இதுகுறித்து திருப்பூர் போலீசாரிடம் மாரியம்மாள் புகார் அளித்துள்ளார். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் பழனிசாமியிடம் புகார் கூறியுள்ளார்.

அவர் அரசுக்கு தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். இந்த சூழலில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மணித்துரையை மீட்க களத்தில் இறங்கியுள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், திரு மணிதுரை அவர்களுக்கு தாய்லாந்திலிருந்து வெளியேறுவதற்கான அனைத்து உதவிகளையும் நமது இந்தியத் தூதரகம் அளித்து வருகிறது.

திருப்பூரில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு அனைத்து தகவலும் தெரிவிக்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார். எனவே விரைவில் மணித்துரை நாடு திரும்புவார் என்பதில் சந்தேகமில்லை.

அடுத்த செய்தி