கொரோனா சிகிச்சைக்கு சில தனியார் மருத்துவமனைகளில் வரம்பு மீறிய கட்டணத்தை வசூலிப்பதாக குற்றசாட்டுகள் பரவலாக இருந்து வருகின்றன. அதுமட்டுமின்றி, தமிழக அரசின் காப்பீட்டு திட்டத்தை சில தனியார் மருத்துவமனைகள் ஏற்க மறுப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனை கொரோனா சிகிச்சைக்காக கூடுதல் கட்டணம் வசூலித்ததாகவும், முதலமைச்சர் காப்பீடு திட்டத்தை ஏற்க மறுத்ததாகவும் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய்து பொது சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
முன்னதாக கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி முதல்வர் ஸ்டாலினுக்கு இதுதொடர்பாக கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், '' கொரோனா சிகிச்சை மட்டுமல்லாது, இதய அறுவை சிகிச்சை, மூளை அறுவை சிகிச்சை என்று உயிர்காக்கும் எல்லா அறுவை சிகிச்சைகளுக்கும் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம் செல்லாது என்று தனியார் மருத்துவமனைகள் தொடர்ந்து தெரிவித்து வருவதாக நாள்தோறும் பல்வேறு மக்களிடம் இருந்து புகார்கள் வருகின்றன.
பார்கள் அனைத்தும் மூடல்... எத்திசையிலும் சரக்கு... திமுக அரசின் பலே திட்டம்..!?
தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு இத்திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளையும், அரசாணைகளையும் அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கு மீண்டும் அனுப்பி அவற்றை சரியாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும் மாவட்ட அளவில், குழு அமைத்து இத்திட்டம் முறையாக நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்க வேண்டும்'' என இவ்வாறு கோரிக்கை வைத்திருந்தார். அதன் தொடர்ச்சியாக சென்னையில் செயல்பட்டு வந்த தனியார் மருத்துவமனையின் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனை கொரோனா சிகிச்சைக்காக கூடுதல் கட்டணம் வசூலித்ததாகவும், முதலமைச்சர் காப்பீடு திட்டத்தை ஏற்க மறுத்ததாகவும் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய்து பொது சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
முன்னதாக கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி முதல்வர் ஸ்டாலினுக்கு இதுதொடர்பாக கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், '' கொரோனா சிகிச்சை மட்டுமல்லாது, இதய அறுவை சிகிச்சை, மூளை அறுவை சிகிச்சை என்று உயிர்காக்கும் எல்லா அறுவை சிகிச்சைகளுக்கும் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம் செல்லாது என்று தனியார் மருத்துவமனைகள் தொடர்ந்து தெரிவித்து வருவதாக நாள்தோறும் பல்வேறு மக்களிடம் இருந்து புகார்கள் வருகின்றன.
பார்கள் அனைத்தும் மூடல்... எத்திசையிலும் சரக்கு... திமுக அரசின் பலே திட்டம்..!?
தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு இத்திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளையும், அரசாணைகளையும் அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கு மீண்டும் அனுப்பி அவற்றை சரியாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும் மாவட்ட அளவில், குழு அமைத்து இத்திட்டம் முறையாக நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்க வேண்டும்'' என இவ்வாறு கோரிக்கை வைத்திருந்தார். அதன் தொடர்ச்சியாக சென்னையில் செயல்பட்டு வந்த தனியார் மருத்துவமனையின் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.