ஆப்நகரம்

Tamil Nadu Rains: உஷார் மக்களே... மிக கன மழை பெய்யப் போகுது - எச்சரிக்கை மணி அடித்த வானிலை மையம்!

தமிழகத்தில் அடுத்த 2 நாட்கள் வானிலை எப்படி இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 8 Aug 2019, 1:54 pm
தமிழகத்தில் பெய்த மழை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் ஒரே நாளில் 82 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
Samayam Tamil Rains2


முன்னதாக 1943ஆம் ஆண்டு மே மாதம் கடலூரில் 56 செ.மீ மழை பெய்ததே அதிகபட்சமாக இருந்தது. இதையடுத்து 1975 நவம்பர் 25ல் சென்னை நுங்கம்பாக்கத்தில் 45 செமீ மழை பதிவானது.

Also Read:

கன்னியாகுமரி, நாகர்கோவிலில் பலத்த மழை- அணைகளின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு!

நீலகிரியில் விடாது பெய்யும் கனமழை- அவலாஞ்சியில் 82 செ.மீ மழைப்பதிவு!

கர்நாடகாவில் போட்டுத் தாக்கும் பெருமழை- காவிரியில் கூடுதல் நீர் திறப்பு - தமிழக மக்கள் குஷி!

நீலகிரி மாவட்டம் மேல் பவானியில் 30 செ.மீ, ஜி பஜாரில் 24, சின்னகல்லாரில் 23 செ.மீ மழை பெய்துள்ளது. தேவாலாவில் 21, வால்பாறையில் 20, பெரியாரில் 18, நடுவட்டத்தில் 15 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் 2 நாட்களுக்கு மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. உள் மற்றும் தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

வங்கக் கடலில் காற்றின் வேகம் 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக் கூடும். இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று தெரிவித்தார்.

அடுத்த செய்தி