ஆப்நகரம்

திருச்சி அருகே உரிய நபர்களிடம் ஒப்படைக்காத தபால்கள் குப்பையில் குவிப்பு...

திருச்சி அருகே உரிய நபர்களிடம் ஒப்படைக்காத தபால்கள் குப்பையில் குவிந்து கிடந்ததை குறித்து அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

Samayam Tamil 14 Jan 2020, 7:12 pm
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள தியாகேசர் ஆலை பள்ளி வளாகத்தில் கிடக்கும் குப்பையில் அதிக அளவிலான உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்படாத தபால்கள் குவிந்து கிடந்தது. இதில் அதிகளவு தபால்கள் எரிக்கப்பட்டு உள்ளது.
Samayam Tamil திருச்சி அருகே உரிய நபர்களிடம் ஒப்படைக்காத தபால்கள் குப்பையில் குவிப்பு


குப்பையில் கிடக்கும் தபால்களில் அதிகளவு புதுக்கோட்டை மாவட்டம் ஒளியமங்கலம், பொன்னமராவதி, திருமயம் ஆகிய பகுதிகளுக்கு உரிய நபர்களிடம் வழங்கவேண்டிய எல்.ஐ.சி, தபால்கள், தனியார் வங்கி தபால்கள், தனியார் இன்சூரன்ஸ் தபால்கள், பள்ளி மாணவர்களுக்கு கொடுக்கவேண்டிய தபால் அட்டைகள், அரசுப்பணி சம்மந்தமான தபால்கள், வருமான வரித்துறை அலுவலக தபால்கள் என பல்வேறு துறை தபால்கள் கொட்டிக்கிடக்கின்றது.

காவலர்களே ரிலாக்ஸ் பிளீஸ்... தர்பார் படத்துக்கு ஏற்பாடு செய்த எஸ்.பி

இந்த தபால்களில் கடந்த 2018 ம் ஆண்டு மற்றும் அந்த ஆண்டுக்கான சில மாதங்களின் தேதிகள் குறிப்பிடப்பட்டுள்ளது. உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்படாமல் குப்பையில் கொட்டிக்கிடக்கும் தபால்களை கண்ட சிலர் மணப்பாறை அஞ்சலக அலுவலகத்திற்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மணப்பாறை உட்கோட்ட அஞ்சலக ஆய்வாளர் கணேசன் மற்றும் அதிகாரிகள் குப்பையில் கிடக்கும் தபால்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உரிய நபர்களிடம் சரியான நேரத்தில் போய்சேராத இந்த தபால்களால் அவர்கள் அந்த நேரத்தில் நேர்ந்த இன்னல்கள் குறித்தும், இதுபோன்ற அசாதாரணமாக நடக்கும் தபால் துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி