ஆப்நகரம்

இப்படி போய் தப்பா சொல்லலாமா? அதிமுகவினர் செயலால் அதிர்ச்சியடைந்த பச்சைமால்!

தன்னைப் பற்றி தவறான கருத்துகளை அதிமுகவினர் பரப்புவதாக, முன்னாள் அமைச்சரும், அமமுகவில் மாவட்ட செயலாளராக இருப்பவருமான பச்சைமால் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 10 Jun 2019, 8:00 pm
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியின் போது, பல்வேறு அமைச்சர் பொறுப்புகளை வகித்தவர் கே.டி.பச்சைமால். மேலும் கன்னியாகுமரி மாவட்டச் செயலாளராகவும் இருந்துள்ளார். ஜெயலலிதா மறைவிற்கு பின், டிடிவி தலைமையிலான அமமுகவிற்கு பச்சைமால் தாவினார்.
Samayam Tamil Pachaimal


அக்கட்சியின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் அமமுக படுதோல்வியைச் சந்தித்தது. இதையடுத்து அமமுகவில் இருந்து பலரும், அதிமுகவை நோக்கி படையெடுத்து வருவதாக தகவல்கள் வெளிவரத் தொடங்கின.

அந்த வகையில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் அசோகன், தனது ஆதரவாளர்களுடன் நேற்று திடீரென பச்சைமால் வீட்டிற்கு சென்றார். அப்போது மீண்டும் அதிமுகவில் இணையும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

இதுகுறித்து கேள்விப்பட்ட பச்சைமால், உடனே செய்தியாளர்கள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தார். அப்போது பேசிய அவர், நான் டிடிவி தினகரன் அணியில் தான் இருக்கிறேன். நேற்று அசோகன் எங்கள் வீட்டிற்கு வந்து அதிமுகவில் சேர அழைப்பு விடுத்தனர்.

உடனே நான் அதிமுகவில் சேரப் போவதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது. இது சரியில்லை என்று கூறினார். இதுகுறித்து அசோகனிடம் கேட்ட போது, நாங்கள் அழைப்பு விடுத்தோம். அதிமுகவில் சேருவது, சேராமல் போவது அவரது விருப்பம் என்று கூறினார்.

அடுத்த செய்தி