ஆப்நகரம்

சவுதியில் உயிரிழந்த தமிழர்களை சொந்த ஊருக்கு கொண்டுவர உறவினர்கள் கோரிக்கை!

சவுதி அரேபிய நாட்டில் உயிரிழந்த, கன்னியாகுமரியைச் சேர்ந்த 4 தொழிலாளர்கள் உடல்களை, சொந்த ஊருக்கு கொண்டுவர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Samayam Tamil 1 Feb 2019, 11:19 am
சவுதி அரேபிய நாட்டில் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த, கன்னியாகுமரியைச் சேர்ந்த 4 தொழிலாளர்கள் உடல்களை, சொந்த ஊருக்கு கொண்டுவர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Samayam Tamil சவுதியில் உயிரிழந்த தமிழர்களை சொந்த ஊருக்கு கொண்டுவர உறவினர்கள் கோரிக்கை!
சவுதியில் உயிரிழந்த தமிழர்களை சொந்த ஊருக்கு கொண்டுவர உறவினர்கள் கோரிக்கை!


கன்னியாகுமரி மாவட்டம் அழகன்பாறை பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவர் சவுதி அரேபியாவில் கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் கன்னியாகுமரி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த அஜித், வில்சன், வேல்முருகன், லாரன்ஸ் ஆகியோர் கட்டுமான தொழிலாளர்களாக பணியாற்றி வந்தனர்.

இவர்கள் கடந்த சனிக்கிழமை அதிகாலை பணிக்கு செல்வதற்காக, தாமாம் பகுதியில் இருந்து காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, பைசல்யா என்ற பகுதியில் நிலவிய கடும் பனி மூட்டத்தால் எதிரே சென்ற கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

இதில் பாகிஸ்தானை சேர்ந்த டிரைவர் உட்பட குமரி மாவட்டத்தை சேர்ந்த கட்டுமான தொழிலாளிகள் அஜித், வில்சன், வேல்முருகன், லாரன்ஸ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலறிந்த இவர்களது உறவினர்கள் உயிரிழந்த நான்கு தொழிலாளிகளின் உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் சவுதி அரேபியாவின் சட்ட திட்டங்கள்படி உடலை கொண்டுவர காலதாமதம் ஆகும் என்பதால், அவர்களின் உடலை துரிதமாக சொந்த ஊருக்கு கொண்டு வர தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்க மத்திய மாநில அரசுகள் முன்வர வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி