ஆப்நகரம்

தனது அனுமதி இல்லாமல் மனைவிக்கு குடும்பக்கட்டுப்பாடு- கணவர் குற்றச்சாட்டு!

தனது அனுமதி இல்லாமல் மனைவிக்கு குடும்பக்கட்டுப்பாடு செய்ததாக கணவர் குற்றம்சாட்டிய சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 16 Jun 2019, 10:47 am
புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில், தனது அனுமதி இல்லாமல் மனைவிக்கு குடும்பக்கட்டுப்பாடு செய்ததாக கணவர் குற்றம்சாட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil தனது அனுமதி இல்லாமல் மனைவிக்கு குடும்பக்கட்டுப்பாடு- கணவர் குற்றச்சாட்டு!
தனது அனுமதி இல்லாமல் மனைவிக்கு குடும்பக்கட்டுப்பாடு- கணவர் குற்றச்சாட்டு!


புதுக்கோட்டை நடைமேடை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி கலைச்செல்வி. இவர்களுக்கு ஏற்கெனவே இரு குழந்தைகள் உள்ள நிலையில், மூன்றாவது பிரசவத்திற்காக கலைச்செல்வி, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கலைச்செல்விக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. அதன்பின் அவரது சம்மதத்தோடு மருத்துவர்கள் கலைச்செல்விக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தனர். இதனிடையே தனது அனுமதி இல்லாமல் தன்னுடைய மனைவிக்கு மருத்துவர்கள், குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து விட்டதாக அவரது கணவர் முருகன் குற்றம்சாட்டியதால் பரபரப்பு நிலவியது.

இச்சம்பவம் குறித்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மீனாட்சி சுந்தரம் கூறும்போது: பெண்ணின் அனுமதியோடு தான் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. எனினும் அவரது கணவர் மருத்துவர்கள் மேல் குற்றம்சாட்டி உள்ளதால், இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும். தவறு நடந்திருந்தால் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

தனது அனுமதி இல்லாமல் மனைவிக்கு குடும்பக்கட்டுப்பாடு செய்ததாக கணவர் ரகளையில் ஈடுபட்ட சம்பவத்தால் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

அடுத்த செய்தி