ஆப்நகரம்

கெயில் குழாய்கள் பதிக்க வயலை நாசம் செய்த அதிகாரிகள்; நாகையில் விவசாயிகள் வேதனை!

எரிவாயு குழாய் பதிக்கும் விவகாரத்தில், விவசாய நிலங்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியது.

Samayam Tamil 15 May 2019, 8:19 pm
நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே காளகஸ்திநாதபுரம் கிராமத்தில் கெயில் நிறுவனம் சார்பில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. முன்னதாக ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.
Samayam Tamil GAIL Pipes


அதாவது நாகை மற்றும் காரைக்காலில் சுமார் 2,574 சதுர கி.மீ பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 158 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக 14 லட்சம் விவசாயிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தங்கள் பணிகளை போலீஸ் பாதுகாப்பு உடன் அந்நிறுவனம் தொடங்கியுள்ளது.

வயல் வெளிகளில் ராட்சத குழாய்கள் பதிக்கும் போது, அந்த நிலப் பகுதிகள் கடுமையாக சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

இவ்வாறு விவசாய நிலங்களில் எரிவாயு குழாய்கள் அமைப்பதால் நிலங்கள் பாதிக்கப்படும். எரிவாயு குழாய்கள் வெடித்தால் அப்பகுதியில் விவசாயமே செய்ய முடியாத நிலை ஏற்படும் என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி