ஆப்நகரம்

காவிரிக்காக தஞ்சையில் விவசாயிகள் ரயில் மறியல்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சையில் விவசாயிகள் ரயில் மறியல் செய்தனர்.

Samayam Tamil 7 Apr 2018, 11:07 am
தஞ்சை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சையில் விவசாயிகள் ரயில் மறியல் செய்தனர்.
Samayam Tamil DaJ6TYTUQAAHfp3


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் அளித்த காலக்கெடு மார்ச் 29ஆம் தேதியுடன் முடிந்த பின்பும் வாரியத்தை அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்துகிறது. இதனைக் கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்துள்ளன.

அரசியல் கட்சிகள் மட்டுமின்றி பல்வேறு அமைப்புகளும் பிரபலங்களும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், தஞ்சையில் விவசாயிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.

ஐயனாவரத்தில் நடைபெற்ற இப்போராட்டத்தில் விவசாயிகள் கூடி தண்டவாளத்தில் அமர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

அடுத்த செய்தி