தஞ்சை: இடைதேர்தல் நடைபெறவுள்ள தஞ்சாவூரில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட விவசாயி ஒருவரின் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தஞ்சை சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் வருகிற 19-ம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் கொடுப்பதை கண்காணிக்க தேர்தல் பறக்கும்படைகள், நிலையான கண்காணிப்பு குழுக்கள், வீடியோ தடுப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுவினர் தஞ்சை தொகுதி முழுவதும் 24 மணி நேரமும் ரோந்து வந்து கண்காணித்து வருகிறார்கள்.
இந்நிலையில், தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் வாகன சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்த போது, விவசாயி காமராஜ் என்பவர் எடுத்து வந்த ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்தனர். உரிய ஆவணமின்றி விவசாயி காமராஜ் பணத்தை எடுத்துவந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Farmer's money seized in Thanjavur
தஞ்சை சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் வருகிற 19-ம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் கொடுப்பதை கண்காணிக்க தேர்தல் பறக்கும்படைகள், நிலையான கண்காணிப்பு குழுக்கள், வீடியோ தடுப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுவினர் தஞ்சை தொகுதி முழுவதும் 24 மணி நேரமும் ரோந்து வந்து கண்காணித்து வருகிறார்கள்.
இந்நிலையில், தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் வாகன சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்த போது, விவசாயி காமராஜ் என்பவர் எடுத்து வந்த ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்தனர். உரிய ஆவணமின்றி விவசாயி காமராஜ் பணத்தை எடுத்துவந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Farmer's money seized in Thanjavur