ஆப்நகரம்

9வது நாளாக தொடரும் கோவை விவசாயிகள் போராட்டம்; குழிக்குள் இறங்கி நூதனப் போராட்டம்!

கோவை: உயர் மின்னழுத்த கோபுரத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

Samayam Tamil 25 Dec 2018, 3:44 pm
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாய நிலங்களில் உயர் மின்னழுத்த கோபுரங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன. இதற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
Samayam Tamil Farmer Protest


கோவையில் கட்னத 16ஆம் தேதி போராட்டம் தொடங்கியது. அன்று முதல் காத்திருப்பு போராட்டம், உண்ணாவிரதப் போராட்டம், பாடை கட்டி போராட்டம், ஒப்பாரி போராட்டம் போன்ற பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

ஆனால் இதுவரை மத்திய, மாநில அரசுகள் விவசாயிகள் கோரிக்கையை கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் 9வது நாளான இன்று 5 அடி குழியை தோண்டி அதில் தண்ணீர் நிரப்பி விவசாயிகள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் கலந்து கொண்டனர்.

அடுத்த செய்தி