ஆப்நகரம்

உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்!

திருப்பூர் மாவட்டம் இச்சிப்பட்டி கிராமத்தைச் சேனாபதி, துரைசாமி ஆகியோரது விவசாய நிலத்தில் உயர்மின் கோபுரம் அமைப்பதற்காக பொக்லைன் இயந்திரத்துடன் பவர்கிரீட் மின்சாரத் துறை அதிகாரிகள் இன்று வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Samayam Tamil 5 Jul 2019, 6:18 pm
தாராபுரம் அருகே உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
Samayam Tamil உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்!
உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்!


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த இச்சிப்பட்டி பகுதிகளில் பல்வேறு இடங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணிக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் போலீஸ் பாதுகாப்புடன் இந்தப் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில் இச்சிப்பட்டி கிராமத்தைச் சேனாபதி, துரைசாமி ஆகியோரது விவசாய நிலத்தில் உயர்மின் கோபுரம் அமைப்பதற்காக பொக்லைன் இயந்திரத்துடன் பவர்கிரீட் மின்சாரத் துறை அதிகாரிகள் இன்று வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

முன்னறிவிப்பு இன்றியும், நிலத்திற்காக அரசு வழங்கும் இழப்பீட்டு தொகை எவ்வளவு என்பதை அறிவிக்காமலும் நிலத்தை அளவீடு செய்ய அனுமதிக்க மாட்டோம் எனக்கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஏற்கனெவே இரு தினங்களுக்கு முன் பவர்கிரிட் மின்சார நிறுவனத்தாரும், நில எடுப்பு தாசில்தாரும் சேனாபதி, துரைசாமி தோட்டத்தில் நில அளவீடு எடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பவர் கிரேட் நிறுவனம் உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு நிலத்தை கொடுத்தால் சுமார் 15 லட்சம் வரை இழப்பீட்டுத் தொகை தருவதாக இடைத்தரகர்கள் மூலம் வாக்குறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று நில அளவீட்டு கருவிகளுடன் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகளிடம் விவசாயிகள் இழப்பீட்டு பணத்தை முதல் தவணையாக எவ்வளவு கொடுப்பீர்கள் என்று கேட்டனர். அப்பொழுது முன்னுக்கு பின்னாக பதிலளித்த பவர் கிரிட் நிறுவனமும், வருவாய் துறையினரும் தற்போது நிலவரப்படி ரூ36 ஆயிரம் மட்டுமே தர முடியும் என கூறியதாக தெரிகிறது. ரூ4 லட்சம் வழங்குவதாக கூறிவிட்டு தற்போது முன்னுக்கு பின்முரணாக கூறியதால் உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்கும் பணியை தங்கள் தோட்டத்தில் நடத்த அனுமதிக்க மாட்டோம் என விவசச்யிகள் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்த உடன், பவர் கிரிட் மின்சார நிறுவன ஊழியர்கள் வலுக்கட்டாயமாக. பொக்லைன் இயந்திரங்கள் மூலமாக குழி தோண்டும் பணியில் ஈடுபட்டனர்.

இதை அறிந்த விவசாயிகள் ஒன்றிணைந்து தங்களுடைய நிலத்தில் மின்கோபுரம் அமைக்க் விடமாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் குழி தோண்டும் பணியை தற்காலிகமாக நிறுத்திவிட்டு சம்பவ இடத்திலிருந்து அதிகாரிகள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

அடுத்த செய்தி